தமிழ் சீரியல்கள் பல நடிகர் , நடிகைகளுக்கு சினிமாவில் நுழைய ஒரு பாலமாக அமைந்துள்ளது. அதுவும் குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் பிரபலமான சீரியல்களில் நடித்து விட்டால் அவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வருகின்றது. அந்த வகையில் விஜய் டிவியில் சீரியல் நடிகையாக இருந்து பின்னர் சினிமாவில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
விஜய் டிவியில் மக்களை கவரும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகியுள்ளது. அந்த வரிசயில் ‘கல்யாணம் முதல் காதல் வரை ‘ என்னும் தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, கிட்டத்தட்ட இந்த சீரியல் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஓடியது. இந்த தொடரில் பிரியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்த பிரியா பவாணி ஷங்கர் இல்லத்தரசிகளை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் ஒரு கிரகத்தை ஏற்படுத்தினார்.
அந்த தொடரில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இருக்கு பட வாய்ப்பும் தேடி வந்தது. 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மேயாதமான்’ என்ற படத்தில் நடித்து சினிமா உலகில் கால் பதித்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கார்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம் ‘ என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இள சுகளில் புதிய க்ரஷ்ஷாக இருந்து வரும் பிரியா ஷங்கர்,சிங்கில் இல்லை என்பது தான் அவரது ரசிகர்களுக்கு நாங்கள் தரும் ஷாகிங் நியூஸ்.
ஆம், பிரியா பவானி ஷங்கருக்கு ஒரு காதலனும் இருக்கிறார். ராகவேல் ராஜா என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார். சீரியலில் நடிக்க வரும் முன்பே பிரியா பவாணி ஷங்கர் ,இவர்களின் காதலித்து வருவதை உறுதி செய்யும் விதத்தில் ராகவேல் ராஜா,தனது ட்விட்டர் பக்கத்தில் கூட ஏற்கனவே பதிவிட்டிருந்தார். எனவே, இவர்கள் இருவருக்கும் விரைவில் டும் டும் டும் நடந்தால் கூட ஆச்சரியமில்லை. இந்த செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் சற்று வருத்தத்தில் தான் இருப் பார்கள். ஹ்ம்ம்!!!