தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் ராஜ் வேல் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வருகிறது. ஆனால், இதுவரை ஒரு முறை கூட பிரியா பவானி சங்கர் வெளிப்படையாக கூறியதில்லை. மேலும், இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் அதிகமாக வந்து கொண்டு தான் இருக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்தது தான்.
அவ்வளவு ஏன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜ் வேல் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது, தனது சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்த பிரியா பவானி சங்கர், நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன் என்று பதிவிட்டிருந்தார்.
இதையும் பாருங்க : நாட்டாமை படத்தில் மிக்சர் காமெடியில் நடித்த இவர் யார் தெரியுமா ? – கே எஸ் ரவிக்குமார் சொன்ன சீக்ரெட்.
இந்த நிலையில் பிரியா பவானி சங்கர், சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில்,சித்ரா பௌர்ணமி இரவு!
போன வருஷம் இதே நாள், ‘கிரிவலம் போனா, மூனு மாசத்துல வேண்டிக்கிட்டத கடவுள் கண்டிப்பா குடுப்பார்’னு friend சொன்னத நம்பி மனசு நிறைய ஒரே வேண்டுதல சுமந்துகிட்டு இரவோட இரவா பௌர்ணமிய தொரத்திக்கிட்டு திருவண்ணாமலை போனேன். கடவுள் கேட்டத குடுக்கலனாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்துலயே எறிந்து கை தட்டி சிரித்தார்.
ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல. மனிதர்களையும் அவர் குணங்களையும் நாம் பிடிவாதமாக பார்க்க மறுத்த கோணத்தில் காலம் காட்டியது. ரெண்டு சித்ரா பௌர்ணமிக்கு இடையே வாழ்க்கை மட்டுமில்ல உலகமே மாறிடுச்சு.நான் மட்டும் இல்ல, உலகமே தனிமையில். ஏனோ கிடைத்த கைகளை பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அவசரவசரமாக அடுத்த வாழ்க்கைக்கு தயாராக இந்த தனிமை தூண்டவில்லை. தனிமையில் நிற்க நமக்கு ஏன் இவ்வளவு பயம்? பதற்றம்? கேட்டதை தராமல் நல்லதை தந்த கடவுள் மேலயும் சித்ரா பௌர்ணமி மேலயும் கோவம் குறைஞ்சு தனிமையின் வெளிச்சத்தில் நிதானமாக தெளிவாக, எந்த எதிர்ப்பும் இன்றி, கிடைத்ததே என்று எந்த பிடிப்புமின்றி நான்.
கிரிவலம் போகாமல், முன் எப்பொழுதையும் விட அமைதியாக தனிமையின் கம்பீரத்தோடு என் வீட்டு மாடியில் சித்ரா பௌர்ணமி.மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும் வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு அழகு. இந்த பதிவை கண்ட பலரும் பிரியா பவனி சங்கருக்கு காதல் பிரேக்கப் ஆகிவிட்டதாக கூறி வருகின்றனர். ஆனால் , இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘செல்போனை பார்த்து சிரித்த படியே இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ள அவர், தன்னை பற்றிய வதந்திகளை படிக்கும் போது இப்படித் தான் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் கமன்ட் செய்துள்ள ராஜ்வேல் ‘நானும் பார்க்கலாமா’ என்று குறிப்பிட அதற்கு பதில் அளித்த பிரியா பவானி சங்கர் ‘உங்களை வாழ்க்கை எப்படி பாத்துக்கொள்கிறது’ என்று கிண்டலாக கூறியுள்ளார்.