உலகம் முழுதும் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்த நடிகை ஒரே பிரியா வாரியர். தன் கண் புருவத்தை தூக்கி காட்டி செய்ததன் மூலமாகவே ரசிகர்களை தன் பக்கம் கவனித்தார். மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த ஒரு அடார் லவ் படத்தில் இவர் காட்டிய குட்டி குட்டி குயூட் ரியாக்சன் மூலம் சடசடவென உலகம் முழுவதும் பேமஸ் ஆகி விட்டார். சமூக வளைதளத்தில் மட்டும் இவரை 70 லட்சம் பேருக்கு மேல் பாலோ செய்கிறார்கள்.
மேலும், இந்த ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்லலாம். இருந்தாலும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் வெற்றி பெறவில்லை. இது குறித்து படத்தின் இயக்குனர் சமீபத்தில் கூட சோசியல் மீடியாவில் கூறி இருந்தார்.
இதையும் பாருங்க : 13 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை போன்றே தற்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட இந்திரஜா.
மேலும், இந்த படத்தின் தோல்விக்கு காரணம் பிரியா வாரியர் தான் என்று ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் நடிகை பிரியா வாரியார் அவர்கள் எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் தன்னுடைய சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் அனைவரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு ஆதார் லவ் மூலம் புகழின் உச்சியில் இருந்த பிரியா வாரியர் அவர்கள் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டது. இந்த படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் பிரியா வாரியர் நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் தான் வெளிவந்தது.
அதில் ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதுபோல காட்சிகளும், மது பிடித்தல், குறைவான ஆடையில் நடித்தல் போன்ற காட்சிகள் இடம்பெற்றது. பிரியா வாரியார் மோசமான ஆடைகளில் நடித்திருந்ததால் ஸ்ரீதேவியை அவதூறு செய்வது போல் இருக்கிறது என்று பலர் கண்டனம் தெரிவித்தார்கள். அதோடு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படம் குறித்து வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது இந்த படம் பாதியிலேயே நிற்கிறது.