என்னது, பிரியாமணி ரெண்டாம் தாரமா – முதல் மனைவியால் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் (இரண்டு குழந்தையே இருக்காம்)

0
3158
- Advertisement -

பிரியாமணி கணவரின் முதல் கணவரால் பிரியாமணி வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் பிரியாமணி. தெலுங்கு திரையுலகில் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த ‘எவரே அதகாடு’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகமான இவர் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் தேசிய விருதும் பெற்றார்.

-விளம்பரம்-
Priyamani mustafa

மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம என்று பல்வேறு மொழிகளில் நடித்து வந்த பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பெற்றாமல் இருக்கிறார் பிரியாமணி. இப்படி ஒரு நிலையில் பிரியாமணியின் திருமணம் சட்டப்படி செல்லாது என்று பிரியாமணி கணவரான முஸ்தபா மீது புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் அவரின் முதல் மனைவி.

இதையும் பாருங்க : முதலில் ‘மாஞ்சா கண்ணன்’ ரோலுக்கு என்ன தான் சொன்னாங்க – சார்பட்டா பட முக்கிய நடிகர் சொன்ன ரகசியம். (ஆனா, இவரு ரோல் செமயா மாட்டிக்கிச்சி)

- Advertisement -

பிரியாமணி கணவரான முஸ்தபா ராஜ் ஏற்கனவே ஆயிஷா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரிந்துள்ளனர். அதன் பின்னர் தான் இவர் பிரியாமணியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து உள்ளார். இப்படி ஒரு நிலையில் முஸ்தபா ராஜ் தன்னிடம் இருந்து முறையாக விவாகரத்து பெறவில்லை என்று அதிர்ச்சி புகாரை அளித்துள்ளார் ஆயிஷா.

மேலும், விவாகரத்து பெறாமல் பிரியாமணியை அவர் திருமணம் செய்து உள்ளது சட்டப்படி செல்லாது என்றும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் ஆயிஷா. மேலும், முஸ்தபா மற்றும் பிரியாமணி மீது கிரிமினல் புகாரும் குடும்ப வன்முறை புகாரும் கொடுத்துள்ளாராம் ஆயிஷா. இதுகுறித்து பிரியாமணியின் கணவர் கூறுகையில் குழந்தைகளின் பராமரிப்புக்கு தேவையான அனைத்தையும் தவறாமல் செய்து வருகிறேன். இப்போது அவர் என்னிடம் இருந்து பணம் பறிப்பதற்கு இந்த செயலில் இறங்கி இருக்கிறார். 2010-ஆம் ஆண்டில் இருந்தே இருவரும் தனித் தனியாக வாழ்ந்து வருகிறோம். கடந்த 2013-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றோம். ஆயிஷா ஏன் இவ்வளவு காலம் அமைதியாக இருந்துவிட்டு இப்போது கேள்வி எழுப்புகிறார்? என்று தெரிவித்துள்ளார். 

-விளம்பரம்-
Advertisement