ஹீரோக்காக மணிக்கணக்கா செட்ல காத்திருக்கனும், ஆனா நடிகைக்கு சம்பளம் மட்டும் – பிரியங்கா சோப்ரா வேதனை.

0
689
priyanka
- Advertisement -

திரைத்துறையில் பெண் நடிகைகளுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா சாட்டியிருக்கும் குற்றம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார். இவர் மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். இவர் பல விளம்பரங்களில் நடித்து இருந்தார். பிறகு 2000 ஆண்டில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்குபெற்று வெற்றியும் பெற்று மிகப் பிரபலமாகி இருந்தார்.

-விளம்பரம்-

பின் இவர் 2002 ஆண்டு மஜீத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தமிழன் படத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ரா பாலிவுட்டிலேயே தங்கிவிட்டார். தற்போது பிரியங்கா சோப்ரா அவர்கள் ஹாலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து உலக அளவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

பிரியங்கா சோப்ரா குடும்பம்:

இதனிடையே பிரியங்கா சோப்ரா அவர்கள் நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து இருந்தார். பின் இவர்கள் இருவரும் 2018 ஆம் ஆண்டு ஜோத்பூர் அரண்மனையில் கிறிஸ்தவ முறைப்படியும், இந்து மத சடங்குகளின் படியும் திருமணம் செய்து கொண்டார்கள். பிரியங்கா சோப்ரா திருமணம் நிக் ஜோனாஸ் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்களின் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்று இருந்தது. இவர்களின் திருமணத்தில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.

பிரியங்கா சோப்ரா குறித்த தகவல்:

அதோடு பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனஸ் 10 வயது சிறியவர். இதனால் இவர்களின் திருமணம் குறித்து பலரால் பலவிதமாக பேசப்பட்டு இருந்தது. பின் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை பெற்று இருந்தார் பிரியங்கா சோப்ரா. இது ஒரு பக்கம் இருக்க, இவர் 2006 ஆம் ஆண்டிலிருந்து ஐநாவின் யுனிசெப் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் சுற்றுச்சூழல், ஆரோக்கியம், பெண் உரிமை, கல்வி உள்ளிட்ட பல சமுதாய விஷயங்களுக்காக குரல் கொடுத்தும் வருகிறார்.

-விளம்பரம்-

பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி:

இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா திரைத்துறையில் பெண்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று குற்றம் சாட்டிருக்கிறார். அதாவது பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டியில் கூறியிருப்பது, பாலிவுட்டில் ஆண்களுக்கு சமமாக சம்பளத்தை நான் வாங்கியது இல்லை. என்னுடன் நடிக்கும் சக ஆண் நடிகர்களின் சம்பளத்தில் வெறும் பத்து சதவீதம் மட்டுமே எனக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது. ஆண், பெண் இருவரின் சம்பளம் மதிப்பிலும் வேறுபாடு அதிகமாக இருக்கிறது. பல பெண் நடிகைகளுக்கு இன்னும் இது நேர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பெண் நடிகைகள் சம்பளம் குறித்து சொன்னது:

ஏன் நான் இப்போது பாலிவுட்டில் நடித்தாலும் எனக்கே இதே நிலைமைதான். எனது தலைமுறை பெண் நடிகர்கள் சம ஊதியம் கேட்கிறார்கள். நாங்களும் கேட்டோம். ஆனால், கிடைக்கவில்லை. படப்பிடிப்பிற்காக சரியான நேரத்திற்கு வந்து மணிக்கணக்காக நீண்ட நேரம் செட்டிலேயே நாங்கள் ஹீரோவிற்காக காத்திருப்போம். ஆனால், ஆண் நடிகர்கள் அவர்களுக்கான நேரத்தில் மட்டும் வந்து விட்டு செல்வார்கள். எப்போதும் படப்பிடிப்பிற்கு வரவேண்டும் என்பதையும் அவர்கள் தான் முடிவு செய்து கொள்வார்கள். இது ஹாலிவுட்டிலும் நடக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

Advertisement