ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு பிரபல வீராங்கனை PT உஷா போட்ட பதிவு. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
354
- Advertisement -

ரஜினி குறித்து பி.டி. உஷா பதிவிட்டுள்ள பதிவும், புகைப்படமும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது . இந்திய தடகள விளையாட்டு வீராங்கனியாக திகழ்பவர் பிடி உஷா. இவரை தங்கமகள் என்று தான் எல்லோரும் செல்லமாக அழைக்கிறார்கள். இந்திய நாட்டிற்காக இவர் பல தங்க பதக்கங்களை வென்றிருக்கிறார். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் 1979 ஆம் ஆண்டில் இருந்து இந்திய தடகள விளையாட்டு போட்டியில் பங்கெடுத்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்திய தடகள விளையாட்டுகளில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராக பிடி உஷா திகழ்கிறார். இதனால் இவரை இந்திய தட களங்களின் அரசி என்றும் கூறுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இவரை பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கிறார்கள். தற்போது இவர் கேரளாவின் கொயிலாண்டியில் உஷா தடகளப் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார். சமீபத்தில் கூட இவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டிருந்தது.

- Advertisement -

பிடி உஷா பதிவிட்ட புகைப்படம் :

இந்த நிலையில் பிடி உஷா பதிவிட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பிடி உஷா தன்னுடைய சோசியல் மீடியாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அனுபம்கெர் ஆகிய இருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இரண்டு மிகப்பெரிய இந்திய சினிமா மேதைகளுடன் நான் என்று கூறியிருக்கிறார். இதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

ரஜினிகாந்தின் திரைப்பயணம்:

கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த படம் அண்ணாத்த.

-விளம்பரம்-

ஜெயிலர் படம்:

இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குடும்ப பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார். மேலும், இந்த படம் நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- அனிரூத் கூட்டணியில் உருவாக இருக்கிறது.

படம் குறித்த தகவல்:

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதை அவரே அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள். மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement