ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்து ரசித்து ரசித்து கதை எழுதினேன். பிரபல நடிகர் உருக்கம்

0
16458
sethuraman
- Advertisement -

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக நடிகரும் மருத்துவருமான சேதுராமன், திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரை துறை பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் சந்தானத்தின் மூலம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் சேது ராமன்.

-விளம்பரம்-
sethuraman

நடிகரும் மருத்துவருமான சேது ராமன். கடந்த வியாழக்கிழமை (மார்ச் 26) இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது . கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஹானா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார். சேதுராமனின் திடீர் இறப்பால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். சேதுராமனின் இறப்பிற்கு பல்வேறு திரை துறை நண்பர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இதையும் பாருங்க : திருநங்கைகளுக்காக உதவி கேட்ட 10 நிமிடத்தில் பணத்தை அனுப்பிய அசுரன் பட நடிகை

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் , பேச்சாளர் என பண்முகம் கொண்ட ராஜ் மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாக்டரும் நடிகருமான சேதுராமன் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். புட் சட்னி என்ற யூடுயூப் சேனலை நடத்தி வந்த ராஜ் முருகன், சினிமாவில் தானா சேர்ந்த கூட்டம், நட்பே துணை போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது பிளாக் ஷீப் குழுவுடன் இணைந்து திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

View this post on Instagram

மரணத்திற்கு சில மணி நேரம் முன்பு வரை விழிப்புணர்வு வீடியோ செய்து கொண்டே இருந்த சமூக ஆர்வலர். இறுதி நாளிலும் இரண்டு முறை நடைபயிற்சி செய்த fitness follower. போன மாதம் தான் ஈசிஆரில் புதிய மருத்துவமனையை துவங்கினார். எனது நெருங்கிய நண்பரின் Webseriesல் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்திருந்த நல்ல நடிகர். இவருக்காகவே ரசித்து ரசித்து எழுதப்பட்ட நல்ல கதை. எதையும் சீக்கிரம் செய்து முடிக்கும் டாக்டர் சேதுராமன்.. என்ன அவசரம் உங்களுக்கு? இத்தனை சீக்கிரமாய் எங்களை விட்டு சென்று விட்டீர்கள். எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல. யாருக்காக வாழ்ந்தோம் எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம். உங்கள் பேரை காலம் சொல்லும்.. Rest in peace bro. My prayers for your family, friends & your little child ☹️ இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை. துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை. இன்பம் பாதி துன்பமும் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம். நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம்.

A post shared by RAJMOHAN (@director_rajmohan) on

சமீபத்தில் சேதுராமன் இறப்பு குறித்து பதிவிட்டுள்ள ராஜ் மோகன், மரணத்திற்கு சில மணி நேரம் முன்பு வரை விழிப்புணர்வு வீடியோ செய்து கொண்டே இருந்த சமூக ஆர்வலர். இறுதி நாளிலும் இரண்டு முறை நடைபயிற்சி செய்த fitness follower. போன மாதம் தான் ஈசிஆரில் புதிய மருத்துவமனையை துவங்கினார். எனது நெருங்கிய நண்பரின் Webseriesல் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்திருந்த நல்ல நடிகர். இவருக்காகவே ரசித்து ரசித்து எழுதப்பட்ட நல்ல கதை. எதையும் சீக்கிரம் செய்து முடிக்கும் டாக்டர் சேதுராமன்.. என்ன அவசரம் உங்களுக்கு?

இதையும் பாருங்க : கௌதமியால் கமலுக்கு நேர்ந்த பிரச்சனை. பாஸ்போர்ட்டால் வந்த குழப்பம்.

-விளம்பரம்-

இத்தனை சீக்கிரமாய் எங்களை விட்டு சென்று விட்டீர்கள். எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல. யாருக்காக வாழ்ந்தோம் எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம். உங்கள் பேரை காலம் சொல்லும்.. Rest in peace bro. My prayers for your family, friends & your little child ☹️ இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை. துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை. இன்பம் பாதி துன்பமும் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம். நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement