இனி என் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வேண்டாம், லாரன்ஸின் அதிரடி முடிவு- பின்னணி இது தான்

0
447
- Advertisement -

இனி யாரும் என் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வேண்டாம் என்று ராகவா லாரன்ஸின் அதிரடி முடிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். பின் இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் ஆனார். அதற்கு பிறகு ராகவா லாரன்ஸ் முன்னணி நடிகராக கலக்கி கொண்டு வருகிறார். தற்போது இவர் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் லாரன்ஸ் என்று சொன்னாலே காஞ்சனா படம் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு நகைச்சுவை வகையில் பேய் படங்களை தந்தவர். முனி, காஞ்சனா 1,2,3 என்ற வரிசையாக படங்களை கொடுத்து இருக்கிறார். தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் ருத்ரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் ருத்ரன் படத்தின் வேலைகளை லாரன்ஸ் கிட்டத்தட்ட முடித்துவிட்டார். ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாகும் இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

- Advertisement -

ராகவா லாரன்ஸ் நடிக்கும் படங்கள்:

அதன் பின் ராகவா லாரன்ஸ் அவர்கள் ‘துர்கா’ என்ற பேய் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் கடந்த ஆண்டே வெளியாகி இருந்தது. இதற்கு சிலர் விமர்சித்து இருந்தாலும் சிலர் நல்ல விதமாக கமெண்டுகளை போட்டு இருந்தார்கள். ராகவா லாரன்சின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இதனை தொடர்ந்து இவர் 17 வருடங்கள் கழித்து உருவாகும் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி. வாசு தான் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இவருடன் படத்தில் வடிவேலு நடிக்கிறார்.

சந்திரமுகி 2 படம்:

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். அடுத்ததாக கொடி புகழ் துரை செந்தில் குமார் இயக்கும் அதிகாரம் படத்திலும் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதையை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றி மாறன் எழுதி இருக்கிறார். இப்படி ராகவா லாரன்ஸ் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பல சமூக சேவைகளை செய்து கொண்டு இருக்கிறார். சினிமாவையும் தாண்டி தொண்டு நிறுவனத்தின் மூலம் நடிகர் லாரன்ஸ் அவர்கள் பல்வேறு ஆதரவற்றோர்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறார். இதனால் இவருக்கு ஒன்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

-விளம்பரம்-

ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்:

சமீபத்தில் கூட சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் சமூக சேவைக்கான டாக்டர் பட்டத்தை லாரன்சுக்கு வழங்கியிருக்கிறது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அவர்கள் வேண்டுகோள் ஒன்று விடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, உங்களிடம் நான் இரண்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒன்று, இத்தனை வருடமாக என்னுடைய அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடை ஆதரவாளர்களுக்கு நன்றி. நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்று உங்கள் நன்கொடைகளால் எனது சேவைக்கு ஆதரவளித்தீர்கள். என்னால் இயன்றதை செய்துள்ளேன். தேவைப்படும்போதெல்லாம் உங்களிடமிருந்து உதவியும் பெற்று இருக்கிறேன். இப்போது நான் நல்ல இடத்தில் இருக்கிறேன்.

வேண்டுகோளில் லாரன்ஸ் கூறியது:

பல திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பதம் ஆகி வருகிறேன். இனி மக்களுக்கு சேவை செய்யும் முழு பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்து இருக்கிறேன். எனவே என் அறக்கட்டளைக்கு இனி உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இரண்டு, இப்போது நான் நடித்து வரும் சந்திரமுகி 2 படத்திற்காக எனது உடலை மாற்றுவதற்கு நான் எடுக்கும் ஒரு சிறிய முயற்சி பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றத்தை கொண்டு வந்த எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி. உங்கள் அனைவரின் வாழ்த்தும், ஆசியும் எனக்கு வேண்டும். உங்கள் ஆசிர்வாதம் மட்டுமே எனக்கு போதும். இத்தனை வருடங்களாக நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி. என்றென்றும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். கூடிய விரைவில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement