ஆல்யா மானஸாவை தொடர்நது ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகிய அர்ச்சனா – இனி அவருக்கு பதில் இவர்.

0
639
archana
- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல் இருந்து மீண்டும் நடிகை ஒருவர் விலகும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் விஜய் டிவி சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த மத்தியில் விஜய் டிவியில் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மனதில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-
archana

அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. தற்போது இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது. மேலும், ஐபிஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நனவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதை. இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். மேலும், தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்கி வருகிறார். முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் இவரே எடுத்து வருகிறார்.

- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல் :-

இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடித்து இருந்தார். சந்தியாவை எப்படியாவது போலீஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று சரவணன் போராடி வருகிறார். இந்த சுழலில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். இருந்தாலும் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால், ஆல்யா குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார்.

முதலில் ரியாவை எற்க மறுத்த மக்கள் :-

ஆல்யா மானசா சீரியலில் இருந்து விலகிய பின் ரியாவை சந்தியாவாக ஏற்க மறுத்தனர். சமீபத்தில் பாரதி கண்ணம்மா சீரியலுடன் மெகா சங்கமம் என இரண்டு சீரியலையும் இனைத்தனர். அதுமட்டும் இல்லாமல் ரியா தனது தத்துருவமான நடிப்பால் மக்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். அதன் பின்னர் ராஜா ராணி சீசனை முதலில் வெற்றி பெற வாழ்த்துச் சென்ற ஆலியா விலகியதும் இப்போது சந்தியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரியா சீரியலை வெற்றி பாதை நோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கிறார் இப்பொழுது மறுபடியும் ராஜா ராணி 2 சகஜ நிலைக்கு திரும்பியது. தற்போது ஆலியா மானசாவே மக்கள் மறந்து விட்டார்கள்.
இவரை சந்தியாவாக மக்கள் ஏற்று கொண்டனர்.

-விளம்பரம்-

அர்ச்சனாவுக்கு ராஜா ராணி 2 வாய்ப்பு :-

அவர் வேற யாரும் இல்லைங்க, சீரியலில் காமெடி வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி வரும் நடிகை அர்ச்சனா தான். இந்த தொடரில் நாயகி சந்தியாவுக்கு இணையாக மக்கள் மத்தியில் படு பேமஸாக இருப்பது வில்லியாக நடிக்கும் அர்ச்சனா கதாபாத்திரம் தான். இவர் தொகுப்பாளினியாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். இதை அடுத்து விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் அர்ச்சனா பங்கேற்று இருந்தார். பிறகு இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சோசியல் மீடியாவில் இவருடைய வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது. அதன் மூலம் தான் இவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கிடைத்தது.

சீரியலில் இருந்து விலகிய அர்ச்சனா :-

இந்த தொடரின் மூலம் அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் இந்த சீரியல் இருந்து விலகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரியலின் காமெடி, வில்லி என்று முக்கிய பங்கு அர்ச்சனாவிற்கு உள்ளது. இப்படி ஒரு நிலையில் சீரியலில் இருந்து அர்ச்சனா விலகுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் கூட அர்ச்சனாவுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது அதனால் தான் கல்யாண வேலை பழுவின் காரணமாக கூட விலகி இருக்கலாம் என்று செய்திகள் வருகின்றனர். ஆலியா மானசா இருந்த இடத்தை ரியா நிரப்பி விட்டார் ஆனால் அர்ச்சனாவின் இடத்தை நிரப்ப முடியுமா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான்.

Advertisement