திடிரென்று நிறுத்தப்பட்ட காற்றின் மொழி சீரியல் – வேறு தொலைக்காட்சியில் நடிக்கும் புதிய சீரியல் குறித்து அறிவித்த சஞ்சீவ்.

0
753
sanjeev
- Advertisement -

பிரபல சீரியல் நடிகரான சஞ்சீவ் புதிய தொடரில் கமிட் ஆகி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று விடுகிறது அதிலும் ராஜா ராணி, சின்னத் தம்பி, நாம் இருவர் நமக்கிருவார், ஆயுத எழுத்து, மௌன ராகம் என்று சினிமா பாணியில் டைட்டில்கள் வைத்து பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் காற்றின் மொழி என்ற தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொடரில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கதாநாயகனாக நடித்து வந்தார்.

-விளம்பரம்-

மேலும் இந்தத் தொடர் மூலம் தமிழ் சீரியலுக்கு அறிமுகமாகி இருந்தார் பிரியங்கா ஜெயின்.இந்த தொடரில் அமெரிக்க ரிட்டர்ன் ஆக அவரும் சஞ்சீவ் இருக்கும் கிராமத்து சூழலில் வாழும் கதாநாயகிக்கும் ஏற்படும் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுஇருந்தது . இந்த தொடரில் கண்மணி என்ற கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை பிரியங்கா.

இதையும் பாருங்க : சிவா மனசுல சக்தில ஜீவா தங்கையா நடிச்ச பொண்ணா இது – கடற்கரையில் நீச்சல் உடையில் கொடுத்த போஸ்.

- Advertisement -

இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் பிரியங்கா ஏற்கனவே ஒரு சில கன்னட படத்தில் கதாநாயகியாகவும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு இவர் மிகவும் புதிதானவர் தான். வெற்றிகரமாக ஒரு வருடத்திற்கு மேல் ஓடிய இந்த தொடர் மொத்தம் 331 எபிசோடுகள் ஓடிய நிலையில் நிறுத்தப்பட்டது.

இந்த சீரியல் நிறைவடைந்ததை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சஞ்சீவ் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி, நான் எங்கும் செல்லவில்லை விரைவில் என் அடுத்த ப்ராஜெக்ட் பற்றி உங்களிடம் தெரிவிக்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் சஞ்சீவ் 7.30 PM பிரைம் டைமில் சன் தொலைக்காட்சியில் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தனது அடுத்த சீரியலின் அறிவிப்பை அறிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement