தமிழ் சினிமா இயக்குனரான அட்லீ இயக்கிய முதல் மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடைந்தது. என்னதான் இவரது படம் மற்ற படங்களில் இருந்து சுட பட்டது என்று கிண்டல் செய்தலும், இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது.
இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த இவர் நண்பன் படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் இயக்குனராக மாறிய அட்லீ இயக்கிய முதல் படமான “ராஜி ராணி ” மாபெரும் வெற்றியடைந்தது. அந்த படத்தில் தான் அட்லீக்கு ஒரு சிறந்த பெயரும் கிடைத்தது.
அந்த படம் அட்லீக்கு மட்டுமல்ல , அந்த படத்தில் நடித்த நயன்தாரா, ஆர்யா, சந்தானம் ,ஜெய் போன்ற அனைவருக்குமே நல்ல பெயரை எடுத்துத்தந்தது. அதிலும் குறிப்பாக அந்த படத்தில் ஜெய் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்ததுடன் அவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்திருந்தது.
ஆனால் முதலில் ஜெய் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்கவிருந்தாராம். ஆனால் அந்த படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரத்தில் சிவா நடிக்க விருப்பம் தெரிவித்தாராம். இதனால் அந்த கதாபாத்திரத்தில் ஜெய்க்கு நடிக்க வாய்ப்பு கொடுத்து விட்டாராம் அட்லீ. இந்த தகவளை நடிகர் சிவகார்த்திகேயனே ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளா