இவ்வளவு வக்ரமாகவும் மனநோயாளியாகவும் யாராவது இருக்க முடியுமா? – சீரியல் நடிகை போலீசில் புகார்.

0
733
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் சிங்கம் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

இந்த சீரியலில் கார்த்தி மற்றும் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஜோடிகள் நிஜ வாழ்விலும் காதலித்து வந்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் சஞ்சீவிற்கு ஒளிபரப்பாகி ‘திருமணம்’ சீரியல் நடிகர் சித்து நடித்து வருகிறார்.

- Advertisement -

மேலும், இந்த சீரியலில் சித்துவின் அம்மாவாகவும் ஆல்யாவின் மாமியாராகவும் நடித்து வருகிறார் நடிகை பிரவீனா. பிரவீணா நாயர் இவர் கேரளாவின் செங்கணசேரியில் பிறந்தார். இவருடைய அப்பா ராம்சந்திரன் நாயர் ஒரு கல்லூரி பேராசிரியர். பிரவீணா தனது 18 வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். 50க்கும் மேற்ப்பட்ட மலையாள படங்களில் நடித்தார் பிரவீணா.மேலும், நடிகை பிரவீனா, சன் டிவியில் பல காலம் ஒளிபரப்பான பிரியமானவளே சீரியலில் நடித்தன் மூலம் தமிழ் ரசுகர்களிடையே பிரபலம் அடைந்தார்.

தமிழ் சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை பிரபலம் சீரியல்களில் நடித்து அசத்தி உள்ளார். மலையாளத்தில் செம்ம ஹிட் ஆன 100 டேஸ் ஆப் லவ் படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.மேலும், இவர் தமிழில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தன்னை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களை வெளியிட்டதாக ஒரு மாணவரின் மீது புகாரளித்துளார்.அந்த புகாரின் பேரில் பாக்யராஜ் என்றவரை டெல்லியில் கைது செய்தனர். அனால் அவர் பின்னர் ஜானிமில் விடுவிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பிரவீனாவின் மகள் தற்போது சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துளார். இந்த விஷயம் குறித்து பிரவீனா கூறும்போது `நாங்கள் போலீஸில் புகார் அளித்தோம் என்பதினால் பழிவாங்கும் நோக்கில் என்னுடைய அம்மா, மகள், உறவினர்கள் என எல்லோரையும் ஆபாசமாக சித்தரித்து வெளியுட்டுள்ளான். இப்படிப்பட்ட மனநோயாளியாக இருக்க முடியுமா என்று கூறிய அவர் தன்னுடைய மகளும் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

Advertisement