சின்னத்திரை சீரியல்களில் வரும் காதல் கதைகளை விட அதில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் தான் தங்களது நிஜ வாழ்வில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர்.
அதே போன்று தற்போதெல்லாம் தங்களது காதலர் யார் என்றும் கூற அவர்கள் தயங்குவதில்லை.சமீபத்தில் விஜய் டிவி யில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியலில் செம்பா என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் மானசா தனது காதலர் மனாஸை விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக கூறினார்.
தற்போது அதே ராஜா ராணி சீரியலில் கதாநாயகனுக்கு தங்கையாக நடிக்கும் வைஷாலி தனிகாவின் காதலர் யார் என்ற தகவலகள் பரவிவருக்கிறது.சத்யா என்னும் தனது நீண்டகால நண்பரை வைஷாலி காதலித்து வருகிறாராம்.அவரது காதலை இரு வீட்டாரிடமும் தெரிவித்துவிட்டனராம்ஆனால் வைஷாலி சீரியல்களில் தவிர்த்து படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம் அதனால் அந்த ஆசை நிறைவேருவதற்காக திருமணத்தை ஒரு சில ஆண்டுகள் தள்ளி வைத்துள்ளார் என்ற தகவல்கள் உலாவுகிறது