தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர்.
மேலும், வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் வைரமுத்து மீதான குற்றச்சாட்டில் மட்டும் உறுதியாக இருந்து வரும் சின்மயி சமீபத்தில் வைரமுத்துவை நேரில் கண்டால் அறைந்து விடுவேன் என்று கூறியிருந்தார்.
இது சமூக வளைத்தளத்தில் விவாதத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் பிரபல இயக்குனரான ராஜன் சமீபத்தில் நடைபெற்ற ஒரு படவிழாவில் பேசும்போது சின்மயிக்கு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்துள்ளார். “நீ வைரமுத்துவின் பெயரை சிதைத்தல், உன்னை சிதைக்க நான் ஆள் வெச்சிருக்கேன்” என்று ஆவேசமாக பேசி இருந்தார்.