ஜெயலலிதாவின் இறப்பு, கருணாநிதியின் செயலின்மை இந்த இரண்டு ஆளுமைகளை செயல்ப்படாத இடத்தில் உள்ளபோது தமிழ்கத்தில் அரசியல் கேளிக்கூத்துகள் நடைபெற்று வருகிறது.வெற்றிடத்தை நான் நிறப்புவேன் என கமல்ஹாசன், ரஜினிகாந்த், பாக்யராஜ், ஸ்ரீபிரியா என பலர் வரிசையில் வந்து நிற்கின்றனர். தற்போது கமல்ஹாசன் கட்சியை ஆரம்பித்து பெயர் மற்றும் கொடியை அறிவித்துவிட்டார்.
இதற்கு முன்னர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டேன் என அறிவித்து காத்திருக்கிறார். ஆனால் இருவரும் சேர்ந்து ஒரு முடிவினை எடுத்துள்ளார்களாரம். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் ரஜினியின் காலா திரைப்படத்தின் சூட்டிங் இரண்டுமே ஒரே இடத்தில் ஒரே செட்டில் தான் நடந்துள்ளது.
இந்த வேளையில் இருவரும் சந்தித்துக்கொண்டு தங்களது அரசியல் வாழ்வு குறித்து பேசியுள்ளனர். மேலும் முழுநேர அரசியலுக்கு வந்த பின்னர் இருவருமே மற்ற அரசியல்வாதிகளைப் போல ஒருவரை ஒருவர் விமர்சித்துகொள்ளக் கூடாது என முடிவெடுத்துள்ளனர்.