கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருவது தான் ரஜினிகாந்த். மேலும்,இவர் சினிமா துறை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார். ரஜினிகாந்த்க்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர்.ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இளைய மகள் சௌந்தர்யா. ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடந்தது.
இதனைத்தொடர்ந்து சௌந்தர்யா முழு மாத கர்ப்பிணியாக இருந்தார். பின் சவுந்தர்யா தன்னுடைய மகனைப் பெற்றெடுப்பதற்காக அம்மா வீட்டுக்கு வந்திருந்தார். சில நாட்களிலில் சௌந்தர்யா அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு வேத் என்று பெயர் வைத்தார்கள். ஏற்கனேவே சௌந்தர்யாவுக்கு,அஸ்வினுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது. பின் இதன் காரணமாக சௌந்தர்யா பெற்றோர் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விட்டார்.
இதையும் பாருங்க : என்னது ‘வாழ்’ பட நடிகை மாடல் அழகியா ? மேலாடை கூட அணியாமல் ஆணுடன் கொடுத்துள்ள போஸ்.
இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்திருந்தனர். ஆனால், அதெல்லாம் தோல்வியில் தான் முடிந்தது பின்னர் இவர்கள் விவாகரத்தும் பெற்றுக் கொண்டார்கள். அதுக்கு பின் சௌந்தர்யா தன்னுடைய மகன் வேத்துடன் ரஜினிகாந்த் வீட்டில் தான் வசித்து வந்தார். இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த், கோவை தொழிலதிபர் வணங்காமுடி மகன் விசாகன் ஆகிய இருவரும் காதலித்து வந்தார்கள் என்ற தகவல் வெளியானது.
மேலும், இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தார்கள். இதை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் படு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிலையில் சௌந்தர்யா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிக்கு அவர் சென்னை திரும்பிய பிறகுதான் இந்த சந்தோஷச் செய்தியைச் சொல்லியிருக்கிறார் அன்பு மகள் செளந்தர்யா.