தலைவா தலைவான்னு கத்துறீங்களே, உள்ளயா விட போறாறு – வெளுத்து வாங்கிய ரஜினியின் பக்கத்து வீட்டு பாட்டி.

0
184
- Advertisement -

ரஜினியோட ரசிகர்களால் தொல்லை தாங்க முடியவில்லை என்று போயஸ் கார்டனில் ரஜினி வீட்டின் முன்பு பெண் ஒருவர் கண்டனம் தெரிவித்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் கொடுத்திருக்கிறது. 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் ரஜினியின் பிறந்தநாள், புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகை என எந்த ஒரு விழாக்கள் வந்தாலுமே அவருடைய வீட்டின் முன்பு ரசிகர்கள் கரகோசம் செய்து கொண்டாடுவார்கள். இது வழக்கமான ஒன்றுதான். இந்த நிகழ்வின் போது சில நேரங்களில் ரஜினி வீட்டில் இருப்பார்.

- Advertisement -

ரஜினி ரசிகர்கள்:

சில நேரங்களில் அவர் படப்பிடிப்புக்காக வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு சென்றிருப்பார். இருந்தாலும் ரசிகர்கள் அவருடைய வீட்டின் முன்பு நின்று வாழ்த்துக்களையும் கோஷங்களையும் செய்து கொண்டு தான் இருப்பார்கள். இந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிக்கு வாழ்த்துக்கள் சொல்ல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் போயஸ் கார்டன் ஏரியாவில் குவிந்திருந்தார்கள். இதனை அடுத்து ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து இருக்கிறார்.

பெண்மணி கண்டனம்:

பின் அவர், அனைவரும் ஆரோக்கியம், மனநிம்மதி உடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒழுக்கத்திலும் சிந்தனையிலும் நேர்மை இருந்தாலே வாழ்க்கையிலும் நிம்மதி வளர்ச்சியும் இருக்கும். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார். இதையெல்லாம் பார்த்த ரஜினியின் பக்கத்து வீட்டு பெண்மணி ஒருவர், ரசிகர்கள் அதிகமாக திரண்டு இருப்பதால் ஆத்திரம் தாங்க முடியாமல் ரஜினியின் வீட்டின் முன்பு சென்று, நாங்களும் தான் டேக்ஸ் கட்டிட்டு இருக்கிறோம்.

-விளம்பரம்-

ரஜினி ரசிகர்கள் குறித்து சொன்னது:

இதே ஏரியாவில் காலங்காலமாக குடியிருக்கிறோம். எங்களுக்கெல்லாம் எந்த ஸ்பெஷலும் கிடையாது. இவங்களுக்கு மட்டும்தான். ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் இங்க வந்து எங்களுக்கு தொல்லையா இருக்கிறது. தலைவா! தலைவா! என்று கத்திக் கொண்டு அவர்கள் போடும் கூச்சல்களுக்கு அளவே இல்லை. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா? எங்களுக்கு மன நிம்மதி வேண்டாமா? நாங்களும் நிம்மதியாக விழாக்கள் கொண்டாட தேவையில்லையா? ரஜினி அவருடைய ரசிகர்களை சந்தித்து வாழ்த்துக்களை சொல்ல வேண்டும் என்றால் கல்யாணம் மண்டபத்திலோ இல்ல வேறொரு தனிப்பட்ட இடத்திலோ சந்திக்கலாம்.

ரஜினி நடிக்கும் படம்:

இப்படி சுற்றி உள்ள வீட்டார்கள் எல்லாம் தொந்தரவு செய்வது ரஜினிக்கு சரியா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதனை அடுத்து ரஜினி தரப்பில் என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று இருக்கிறது.தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வேட்டையன். இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

Advertisement