கோலங்கள் சீரியலுக்கு பின்னர் ரஜினி பார்க்கும் சன் டிவி சீரியல் – ஜெயிலர் நடிகரிடம் ரஜினி சொன்ன விஷயம்.

0
1447
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல் குறித்து ரஜினிகாந்த் கூறியிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் ட்ரெண்டிங்காக இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

Thiruselvam

சீரியல் குறித்த தகவல்:

இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது.
பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். தற்போது சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், தற்போது டிஆர்பி உச்சத்தில் இந்த சீரியல் தான் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இயக்குனர் திருச்செல்வம் அளித்த பேட்டி:

தற்போது வாரத்தின் ஏழு நாட்களும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையும் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த செய்தி எதிர்நீச்சல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியல் குறித்து ரஜினிகாந்த் கூறியிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் இயக்குனர் திருச்செல்வம் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

எதிர்நீச்சல் சீரியல் குறித்து சொன்னது:

அதில் அவர், கோலங்கள் சீரியலை இயக்கி முடித்த போது எனக்கு ரஜினிகாந்த் இடம் இருந்து அழைப்பு வந்தது. நான் அவரை பார்க்க சென்றேன். அப்போது நாங்கள் சீரியலை பற்றியும் இன்னும் சில விஷயங்கள் குறித்தும் இரவு 45 நிமிடங்கள் பேசினோம். பின்பு நான் அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அதேபோல் ஜெயிலர் படப்பிடிப்பில் மாரிமுத்து விடம் எதிர்நீச்சல் சீரியலை பற்றி ரஜினிகாந்த் பேசி இருக்கிறார். அதோடு எதிர்நீச்சல் சீரியலை எங்கள் வீட்டில் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். நானும் அடிக்கடி பார்ப்பேன் என்று ரஜினி கூறியிருந்ததாக திருச்செல்வம் சொல்லியிருக்கிறார்

Advertisement