ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் நடிப்பதா இருந்துச்சி, யார் யாருக்கு என்ன ரோல் – ரஜினி சொன்ன சுவாரசிய தகவல்.

0
493
rajini
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் மணிரத்தினம். இவரின் நீண்ட நாள் கனவுப்படமே ‘பொன்னியின் செல்வன்’.` பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இதை படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும், சைடில் டெக்னிகல் ஆகவும் கலை இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் வெளியீடு:

அனைவரும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் தான் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் வெளியாகி இருந்தது. மேலும், சில தினங்களுக்கு முன் தான் பிரம்மாண்டமாக படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து முடிந்தது. இதில் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட பலரும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்கள்.

-விளம்பரம்-

படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா:

இவர்களுடன் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். ட்ரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தமிழில் வெளியான ட்ரெய்லருக்கு கமலஹாசன் தான் பின்னனி குரல் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கூறியிருந்தது, எனக்கு நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால், நான் பக்க எண்கள் பார்த்து தான் படிக்க தொடங்குவேன். 200 – 300 வரை இருந்தால் சரி என்று படிப்பேன். ஆனால், 500க்கு மேலே போனால் அதை வாசிக்கவே மாட்டேன். பொன்னியின் செல்வன் மொத்தமாக ஐந்து பாகமும் 2000 பக்கம் என்று கூறினார்கள்.

விழாவில் ரஜினி கூறியது:

அட போங்கடா என்று சொல்லிவிட்டேன். அப்போது ஒரு பத்திரிக்கைக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த பேட்டியில் பொன்னியின் செல்வன் கதையில் வந்தியதேவன் கதாபாத்திரத்திற்கு யார் சரியாக இருப்பார்? என்று கேட்டதற்கு ரஜினி சரியாக இருப்பார் என்று சொன்னார். அப்போதே பொன்னியின் செல்வன் கதையை படிக்கணும் என்று முடிவு செய்தேன். அந்த நாவலை படிக்க படிக்க அவ்வளோ அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக கல்கி வடிவமைத்து இருந்தார். மேலும், நாவலை வாசிக்கும் போதே என்னை நான் வந்திய தேவனாகவும், கமலை அருள்மொழி வர்மனாகவும், ஆதித்ய கரிகாலன் விஜயகாந்த் ஆகவும், பெரிய பழுவேட்டையர் ஆக சத்தியராஜையும் கற்பனை செய்து படித்தேன் என்று கூறி இருந்தார்.

Advertisement