நாக சைதன்யாவின் 4000 கோடிக்கு ஆசைப்பட்டாரா சோபித்தா- யூடியூபர் ராஜ்மோகன் சொன்ன தகவல்

0
525
- Advertisement -

சமீபத்தில் நிச்சயதார்த்தமான நாக சைதன்யா- சோபிதா துலிபாலா குறித்து யூடியூபர் ராஜ்மோகன் பேசியிருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஜோஷ்’ திரைப்படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். பின் கௌதம் இயக்கத்தில் இவர் நடித்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு பதிவு மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் தான் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பின், இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள்.
ஆனால், இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரமும் தெரியவில்லை.

- Advertisement -

நாக சைதன்யா- சோபித்த துலிபாலா காதல்:

இவர்களின் விவாகரத்துக்கு பிறகு நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவியது. அதற்கு ஏற்றார் போல், சமீபத்தில் தான் இவர்கள் இருவருக்கும் மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து நடிகை சமந்தாவிற்கு ஆறுதலாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்‌. வைரத்தை(சமந்தா) தொலைத்து, தங்கத்தை(சோபிதா) தேடுகிறார் என நாக சைதன்யாவுக்கு எதிராகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

ராஜ்மோகன் ரிப்போர்ட்:

இந்நிலையில் நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம் தொடர்பாக குவியும் வன்மங்களுக்கு எதிராக ராஜ்மோகன் தனது யூடியூப் சேனலில் பேசி உள்ளார். அதில், நாக சைதன்யாவை சமந்தா திருமணம் செய்து கொண்டது 4000 கோடி சொத்துக்காக தான் என்று பேசப்பட்டது போல், தற்போது சோபிதாவையும் அதேபோல் கூறி வருகின்றனர். நாக சைதன்யாவை உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, சில காரணங்களால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது என்று முடிவை எடுத்தார். அவர்களின் அன்பான திருமண வாழ்க்கை, நரகமாக மாறிவிட்டது.

-விளம்பரம்-

சமந்தா- நாக சைதன்யா பிரிவு:

அதன் பின்னர் இருவரும் பரஸ்பரம் பேசி முடிவு செய்து சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றனர். அதை தொடர்ந்து, சமந்தா விவாகரத்து செய்தது ஜீவனாம்சத்துக்காக தான் என்று பலரும் கூறினர். ஆனால், அவர் ஒரு ரூபாய் கூட நாக சைதன்யாவிடம் இருந்து பெறவில்லை. அதேபோல், தற்போது சோபிதா 4000 போடி சொத்துக்காக தான் ஏற்கனவே திருமணம் ஆன நாக சைதன்யாவை திருமணம் செய்ய போகிறார் என அவர் மீதும் அபாண்டமாக பழியை போடுகிறார்கள். மேலும் இவர்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்ததே, சமந்தாவை பழிவாங்க தான் என்று கூறி வருகிறார்கள்

சோபிதா- நாக சைதன்யா நிச்சயதார்த்தம் நாள்:

ஆனால், அவர்கள் லயன்ஸ்கேட் கேட் ஓபன் ஆகும் நாள் எனக் கூறப்பட்ட 8-8-8 கூட்டுத் தொகை வரும் நாளில் தான் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். மற்றபடி சமந்தா, நாக சைதன்யாவுக்கு ப்ரொபோஸ் செய்த நாளில் நிச்சயம் செய்ய வேண்டும் என்பதற்காக இல்லை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிடித்தால் நிச்சியம் செய்து கொண்டு திருமணம் செய்து கொள்ளலாம். அதேபோல், டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் கணவன் மனைவியாக இருந்தால் கூட சேர்ந்து வாழ வேண்டும் என்று அவசியம் கிடையாது. ஆனால், அதை ஏன் இந்த சோசியல் மீடியாவில் இவ்வளவு கொச்சையான விஷயமாக மாற்றி பேசி வருகிறார்கள் என்று தெரியவில்லை என ராஜ்மோகன் கடுமையாக பேசி உள்ளார்.

Advertisement