உங்க கேம்க்கு என் பிரச்சன தான் கெடச்சதா, கேவலமா இல்ல- மாயா மற்றும் பூர்ணிமாவை கழுவி ஊற்றிய ரசிதா

0
131
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 40 நாட்களை கடந்து இருக்கிறது. முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக தினேஷ் என்ட்ரி ஆகி இருந்தார். சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தினேஷ். இவர் இவர் சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கெடுத்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆகுவது என்னுடைய மனைவி ரக்ஷிதாவுக்கு தான் என்று பேட்டியில் கூட தினேஷ் கூறியிருந்தார். மேலும், பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே தினேஷ் பெரிதாக எந்த சர்ச்சையிலும் ஈடுபடவில்லை. ஆனால், மாயா- பூர்ணிமா செய்த வேலைகளை கண்டு கோபத்தில் தினேஷ் பேசியிருக்கிறார். அதேபோல் மாயா- பூர்ணிமா இருவரும் தினேஷை டார்கெட் செய்திருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

பின் bb கோர்ட் டாக்கில் கூட தினேஷ், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி ஆண்களுக்கு அவமரியாதையாக நடக்கிறார்கள் என்று தொடர்ந்த வழக்கில் தினேஷ் வெற்றி பெற்றார். இதனால் கடுப்பான மாயா- பூர்ணிமா, தினேஷை டார்கெட் செய்ய வேண்டும். அவனை ஏதாவது பண்ணனும் என்று பேசி இருக்கிறார்கள். அதற்கு மாயா, அவனுடைய மனைவி ரக்ஷிதா தானே என்று சொன்னவுடன் பூர்ணிமா அதை வைத்து என்ன பண்றது? என்று கேட்கிறார். உடனே மாயா, அதை பத்தி கேட்டு அவரைப் பேச வைக்கணும் என்று சொன்னவுடன் பூர்ணிமா, சரி ஓகே எனக்கு புரிந்து விட்டது என்று சொல்கிறார்.

தினேஷ் குறித்து சொன்னது:

மேலும், தினேஷை நாம டம்மியா வச்சுக்கணும். தினேஷ் எப்போதும் நம்ம சைடு தான் நிக்கணும். சண்டை போட்டாலும் அவன் நமக்காக நின்று தான் சண்டை போடணும் என்றெல்லாம் மோசமாக இருவரும் பேசி இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக ரக்ஷிதா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இது ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை.

-விளம்பரம்-

ரக்ஷிதா பதிவு

சினிமா செலிப்ரிட்டி என்று வந்தாலே அவர்களுக்கு தனிப்பட்ட விஷயத்தை ரகசியமாக எதுவும் வைத்திருக்க முடியாது என்று தெரியும். ஆனால், இதைப் பற்றி தெரிந்து கொள்ளணும், பேசணும் என்பது இன்னொருத்தருடைய வேலையும் கிடையாது. என்னுடைய லைஃபும் ஒரு பப்ளிக் பிரச்சனை கிடையாது. அதைப்பற்றி விருப்பம் தெரிவிக்கவும், கருத்து சொல்லவே முடியாது. எல்லோருமே ஒவ்வொரு கஷ்டத்திலும் இருக்கிறார்கள். அது முடிந்து போனது.

மாயா-பூர்ணிமா கொடுத்த பதிலடி:

என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை பேசுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது, தகுதியும் கிடையாது. நீங்கள் விளையாட இது ஒரு டாப்பிக்கா? வெக்கமா இல்லையா? இது ஒரு கேம் கன்டென்டா? வைத்து விளையாடுவதா. தயவுசெய்து இந்த மாதிரி விளையாடுவதை நிறுத்தி விடுங்கள். bully gang நன்றாக விளையாடுங்கள். அமைதியாக இருக்கிறேன் என்று அதை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். அனுபவித்தவர்களுக்கு தான் அதன் வலி வேதனை தெரியும். என்னுடைய டேக் யூஸ் பண்ணி யாரும் விளையாட வேண்டாம் என்று ஆவேசமாக பேசி இருக்கிறார்.

Advertisement