புகைப்படங்களை வெளியிட்டதால் ஏற்பட்ட விபரீதம். ரம்யா பாண்டியன் எடுத்த அதிரடி முடிவு.

0
56277
Ramya-pandiyan
- Advertisement -

ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் சமூக வலைத்தளம் முழக்க ட்ரெண்டிங்கில் வந்து இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரம்யா பாண்டியன். ராஜமுருகன் என்ற இயக்குனரின் அற்புத படைப்பான ஜோக்கர் திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த காலத்தில் உள்ள அரசியல் வாதிகளையும்,ஊழல் அதிகாரிகளையும் தைரியமாக எதிர்க்கும் ஒரு பாடமாக அமைந்தது. மேலும், இந்த படம் பல விருதுகளையும் குவித்தது. இந்த படத்தில் கதாநாயகியாக வரும் மல்லிகா என்ற கதா பாத்திரத்தில் நடித்தவர் தான் ராம்யா பாண்டியன்.

-விளம்பரம்-
Image

- Advertisement -

1990 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார்.பின்னர் திருநல்வேலியில் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்பை நிறைவு செய்தார். இவர் தமிழில் முதன் முதலில் அறிமுகமான படம் டம்மி தப்பாசு என்ற படம் தான். அந்த படத்திற்கு முன்பே மானே தேனே பொன் மானே என்ற குறும்படத்திலும் நடித்திருக்கிறார்.தேசிய விருது வாங்கிய படத்தில் நடித்த நடிகைகே சினிமாவில் வாய்ப் பில்லாதது கொஞ்சம் வருந்ததக்க விஷயம் தான்.

இதையும் பாருங்க : நம்மை சிரிக்க வைத்த குமரிமுத்துவின் கல்லறையில் இப்படி தான் எழுதப்பட்டுள்ளது. வைரலாகும் புகைப்படம்.

ஜோக்கர் படத்தில் ஒரு கிராம பெண்ணாக இருந்த இவர் நேரில் பார்த்தால் ஒரு மாடர்ன் மயிளாக மிகவும் அழகாகஇருக்கும் இவர் சமீபத்தில் புடவையில் தனது இடுப்பை காட்டி நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் ரம்யா பாண்டியன் பெயரில் போலியாக ஆரம்பிக்கப்பட்ட டிவிட்டர் கணக்கு ஒன்றில் இருந்து, சில நிர்வாணப் புடைப்படங்கள், மோசமான பதிவிகள் வெளியிடப்பட்டதை கண்டு நடிகை ரம்யா பாண்டியன் பெரும் ஷாக்கடைந்துள்ளார்.

-விளம்பரம்-

இதனால் சுதாரித்து கொண்ட அம்மணி தனது ஒரிஜினல் ட்விட்டர் கணக்கில் தோன்றி தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். மேலும், தனது பெயரில் போலி கணக்கு ஆரம்பித்து நிர்வாண புகைப்படங்களை பதிவிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார் இந்த இடுப்பழகி. என்னதான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தாலும், ரம்யா பாண்டியனுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வரவில்லை. தற்போது விஜய் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியில் கவர்ச்சியை கைவிட்டு கரண்டையை கையில் எடுத்து சமைத்து வருகிறார் அம்மணி.

Advertisement