தலைவர் 171 படத்தில் ரத்ணகுமார் இல்லை – லியோ மேடையில் அவர் பேசியது தான் காரணமா?

0
740
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த தளபதி விஜய்யின் “லியோ” படத்தை லோகேஷ் இயக்கி இருக்கிறார். மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தட், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக பல சாதனைகளை செய்து வருகிறது. இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்குகிறார். அந்த படத்திற்கு தலைவர் 171 என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

- Advertisement -

தலைவர் 171 படம்:

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எல்லாம் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தலைவர் 171 படத்தில் ரத்தினகுமார் பணியாற்றவில்லை என்ற தகவல் தற்போது உறுதியாகி இருக்கிறது. இவர் பிஸியாக வேறு இயக்குனர்கள் படத்தில் பணியாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் தலைவர் 171 படத்தில் இருந்து வெளியேறியதற்கு காரணம் இவர் லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய சில சர்ச்சையான கருத்துக்கள் தான் என்று கூறப்படுகிறது.

ரஜினி சொன்ன கதை:

அதாவது, லியோ படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் ரத்னகுமார் ‘எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்த தான் ஆக வேண்டும் என்று பேசி இருந்தார். இது மிக பெரிய அளவில் சர்ச்சை கிளப்பி இருந்தது. காரணம், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய போது காட்டில் பெரிய மிருகங்கள் எப்பவும் சின்ன மிருகங்களை தொல்லை செய்து கொண்டிருக்கும் என்று காக்கா-கழுகு கதையை சொன்னார்.

-விளம்பரம்-

ரஜினி – விஜய் ரசிகர்கள் சண்டை:

இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் காக்கா என்று விஜய் தான் குறிப்பிட்டு ரஜினி பேசியிருந்ததாக சோசியல் மீடியாவில் பூகம்பத்தை கிளம்பி இருந்தார்கள். இதனால் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பனிப்போரே நடந்தது. பின் இந்த ப்ரச்சனை ஓய்ந்து அடங்கிய நிலையில் லியோ படத்தின் வெற்றி விழாவில் ரத்னகுமார் பேசிய இந்த பேச்சு மீண்டும் ரஜினி – விஜய் ரசிகர்கள் மத்தியில் மோதலை உருவாக்கியது. இதனால் இவர் ட்விட்டரில் இருந்தே விலகிவிட்டார்.

ரத்தினகுமார் குறித்த தகவல்:

இப்படி இருக்கும் நிலையில் தற்போது இவர் தலைவர் 171 படத்தில் இருந்து விலகி இருக்கிறார். இதற்கு காரணம் இந்த சர்ச்சை தான் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் லோகேஷ்- ரத்தினகுமார் இருவருமே நல்ல நண்பர்கள். லோகேஷ் இயக்கிய படங்களில் ரத்தினகுமார் பணியாற்றி இருக்கிறார். இப்படி இருக்கும் போது இவர் விலகியது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ரத்தினகுமார் அவர்கள் அமலாபால் நடிப்பில் வெளிவந்த ஆடை, சந்தானம் நடிப்பில் வந்த குளு குளு படத்தை எல்லாம் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement