தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் நயன்தாரா முதன் முதலில் சிம்புவை காதலித்த விடயம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்கள் இருவரும் காதலித்த போதே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தனர். ஆனால், அதன் பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.
உண்மையில் இவரகள் இருவரும் கருது வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர் என்று கருதப்பட்டு வரும் நிலையில், நயன்தாரா மற்றும் சிம்புவின் பிரிவிற்கான காரணத்தை கூறியுள்ளார் இயக்குனர் ஜி டி நந்து. எங்கயோ கேள்விப்பட்ட பெயரை போல தோன்றுகிறது அல்லவா.
ஜி டி நந்து வேறு யாரும் இல்லை சிம்புவை வைத்து படம் பண்ணலாம் என்று ஏமாந்த பல இயக்குனர்களில் இவரும் ஒருவர். இவர் சிம்புவை வைத்து “கெட்டவன்” என்ற படத்தை இயக்க முற்பட்டார். ஆனால், சில பல காரணங்களால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஜி டி நந்து, சிம்பு மற்றும் நயன்தாராவுக்கு இடையே நடந்த ஒரு ரகசியத்தை கூறியுள்ளார்.
இயக்குனர் நந்து:
இதுகுறித்து பேசிய இயக்குனர் நந்து, பல வருடங்களாக காதிலிது வந்த நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் கிறிஸ்துவ முறைப்படி மோதிரம் மாற்றித் திருமணம் நடைபெற்றது(நயன்தாரா கிருஸ்துவர் அல்லவா) அது எனக்குத் தெரியும். எனக்கு தெரிந்தவரை அவர்கள் இருவரும் பிரிவதற்கு ஒரு முக்கிய கரணம் என்றால், ஒருமுறை ட்ரிப்ளிகேன், பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த ஜோசியர் ஒருவரை நானும், சிம்பு தரப்பில் ஒருவரும் சந்தித்தோம்.
அப்போது சிம்பு, நயன்தாரா இருவரின் ஜாதகங்களைப் பார்த்த அந்த ஜோதிடர்,நயன்தாராவுக்கு திருமணம் நடைபெற்றால் அவர் தெருவுக்குத்தான் வர வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், அவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தால் முதலமைச்சராக கூட வர வாய்ப்பிருக்கிறது என்றார். இதுவே அவர்கள் பிரிவதற்கு காரணமாக கூட இருக்கலாம் என்று இயக்குனர் நந்து ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.
அந்த ஜோதிடர் கூறியது போலவே ஒருவேளை நயன்தாரா, சிம்புவை திருமணம் செய்து கொண்டிருந்தாள் கண்டிப்பாக இன்று ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வந்திருப்பாரா என்பது சந்தேகம் தான். அதற்காக நயன்தாரா முதலமைச்சராகவும் ஆக முடியாது அல்லவா.