கடந்த 2005ஆம் ஆண்டு பிரசன்னா நடித்து வெளிவந்த படம் ‘கண்ட நாள் முதல்’. இந்த படத்தில் தனது 15 வயதில் அறிமுகம் ஆனவர் ரெஜினா கேசான்ரா. அதன் பின்னர், அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் படங்களில் நடித்தாலும் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் பிரபலம் ஆனார் ரெஜினா.
தற்போது தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு தெலுங்கில் சங்கரா என்ற படத்தில் ‘நர ரோகித்’ என்ற தெலுங்கு நடிகருக்கு ஹீரோயினாக நடித்தார். இந்த படத்தில் இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தனர்.
மேலும் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் இருவரும் தனியாக பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இதனால் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வந்தது. அந்த படத்தினை தொடர்ந்து ரோகித்துடன், ‘ஜயோ அச்சுசாணந்தா’ மற்றும் ‘பாலகிருஷ்ணடு’ என இரண்டு படங்களில் நடித்தார். இதனால் இருவருக்கும் இடையில் இருந்து நெருக்கம் இன்னும் அதிகமானது.
எங்களுக்குள் எதுவும் இல்லை என இருவரும் மருத்து வருகின்றனர். அனைத்து ஜோடிகளை போலவே இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர் என செய்திகள் பரவி வருகிறது.