ரகுவரணின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் – Unseen புகைப்படத்தை பதிவிட்டு ரோஹிணி உருக்கம்

0
1069
- Advertisement -

நடிகர் ரகுவரன் உடைய நினைவு நாள் குறித்து நடிகை ரோகிணி பதிவிட்டிருக்கும் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் ரகுவரன். இவர் 80ஸ் காலகட்டம் தொடங்கி 2000 காலகட்டம் வரையிலான ரசிகர்களுக்கு ரகுவரன் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். முதன்முதலில் ரகுவரன் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள படத்தில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் தமிழில் ஏழாவது மனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரகுவரன் அதன் பின்னர் வில்லனாக நடிக்க துவங்கினார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொரிந்து போனது. பின்னர் இவர் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

- Advertisement -

ரகுவரன் திரைப்பயணம்:

90ஸ் ரசிகர்களுக்கு நடிகர் ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக மிகவும் பிரபலமாக இருந்தார். தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் சரத்குமார், கார்த்தி என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ரகுவரன். இதனிடையே ரகுவரன் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார்.

ரகுவரன் – ரோகினி :

நடிகை ரோகிணியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக தான் திகழ்ந்து வந்தார். ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரோகினி அதன் பின் தொடர்ந்து துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் ரகுவரனை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி என்ற குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்து விட்டார்கள்.

-விளம்பரம்-

ரகுவரன் இறப்பு:

ரகுவரன் மற்றும் ரோகிணி பிரிந்த நான்கு வருடங்களில் நடிகர் ரகுவரன் கவனிக்க ஆளில்லாமல் தனியாகத்தான் வசித்து வந்தார். பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ரகுவரன் இறந்தார். இவரது மரணத்திற்கு நடிகை ரோகிணி கூட வந்திருந்தார். இந்த நிலையில் நடிகர் ரகுவரனின் மனைவி ரோகினி பதிவிட்டு இருக்கும் டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ரோகினி டீவ்ட்:

அதாவது, மார்ச் 19 2008 ஒரு சாதாரண நாளாக தொடங்கியது. ஆனால், எனக்கும் ரிஷிக்கும் எல்லாவற்றையும் மாற்றியது. ரகு இருந்திருந்தால் சினிமாவின் இந்த கட்டத்தை மிகவும் நேசித்திருப்பார். மேலும், ஒரு நடிகராகவும் அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்று பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ரோகிணிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement