கடந்த தீபாவளிக்கு பிரம்மாண்டமாக பல பிரச்சனைகளளை சந்தித்து திரையில் வந்தது விஜயின் மெர்சல் படம். சமீபத்தில் படத்தின் 50ஆவது நாள் வெற்றியை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
ஆனால், கொண்டாடியது சில வாரம் கூட நீடிக்கவில்லை. 50ஆவது நாள் கொண்டாடிய சென்னையின் பிரபலமான தியேட்டரான ரோகிணியில் மெர்சல் படம் நீக்கப்பட்டுள்ளது.
#Mersal ends its theatrical run in a high note leaving milestones. Very contended as an executive director of @RohiniSilverScr . Personally thank each n every fan and audience for making the movie a mega blockbuster. @actorvijay @ThenandalFilms
— Rhevanth Charan (@rhevanth95) December 8, 2017
மெர்சல் படம் இவ்வளவு நாளாக பல சாதனைகளை படைத்தது பிரம்மாண்டமாக ஓடியது. இந்த படத்தை வெற்றி பெற வைக்க உழைத்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரோகிணி தியேட்டர் உரிமையாளர்.
இதனால், விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையே இந்த தியேட்டரில் எங்கள் படம் தான் அதிக நாள், ஓடியது, எங்கள் படம் தான் அதிக வசூல் செய்துள்ளது என போர் மூண்டுள்ளது