பிரபல நடிகையான சாய் பல்லவி விஜய் மற்றும் அஜித் படத்தில் நடிக்க முடியாது என அவர் கூறிய கரணம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் கோயம்பத்தூரை பூர்விகமாக கொண்டவர். இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.
பின் 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளி வந்த “பிரேமம்” என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய் பல்லவி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். இப்போது கூட இவரை அதிகம் மலர் டீச்சர் என்று தான் ரசிகர்கள் கூப்பிடுகிறார்கள். பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சாய்பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து ‘விரத பர்வம்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
முன்னணி நடிகை :
இவர் 2005 ஆம் ஆண்டில் இருந்து குறைவான படங்களே நடித்திருந்தாலும் இவர் நடித்த ஓடங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெறுகின்றன. அதற்கு காரணம் தனது திறமையை வெளிப்படுத்தும் படங்களால் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டியதுதான். இவர் நடித்த ஃபிடா, பிரேமம் மற்றும் லவ் ஸ்டோரி போன்ற திரைப்படங்களில் அவரது நடிப்பு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்று தென்னிந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியுள்ளது.
விஜய் மற்றும் அஜித் படத்தில் நடிக்க மறுப்பு :
இப்படி மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தாலும் பல நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை அவர் தவிர்த்திருக்கிறார். உதாரணமாக தெலுங்கு பிரபல நடிகர் விஜய் தேவர்கொண்டாவை சொல்லலாம். அதே போல தமிழ் சினிமாவில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான “வாரிசு” திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவிக்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்து. ஆனால் அந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டார், அதனால் தான் நடிகை ராஷ்மிக்கா மந்தனா நடித்திருந்திருந்தார்.
அதே போல எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” திரைப்படத்திலும் கதாநாயகியாக இவருக்குத்தான் வாய்ப்பு கிடைத்து என்றும் ஆனால் அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேலை இவர் இப்படி தென்னிந்திய சினிமாவில் இரண்டு பெரிய நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாலும் அதற்க்கான காரணம் நியாயமானது. ஏனென்றால் பொதுவாக கதாநாயகிகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருபவர் நடிகை சாய் பல்லவி.
காரணம் :
இதனை நடிகை சாய் பல்லவி முன்னரே ஒரு போட்டியில் கூறியிருக்கிறார். அதோடு சோசியல் மீடியாவிலும் அதிகமாக ஆக்டிவாக இருக்க மாட்டார். இருந்தாலும் இவர் சிறந்த நடிகை என பெயர்வாங்க காரணம் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் தான். வாரிசு மற்றும் வலிமை படத்தில் கதாநாயகிகளுக்கு குறைவான பங்களிப்பே கொடுக்கப்பட்டது. இதனை ராஷ்மிக வெளிப்படையாக ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இதனால் தான் நடிகை சாய் பல்லவி விஜய், அஜித், விஜய் தேவர்கொண்ட போன்ற முன்னணி நடிகர்களின் படங்களின் வாய்ப்பை தவிர்த்து விட்டார் என்பது குறிப்பிடதக்கது.