சீதா கதாபாத்திரம், வாரிசு நடிகையால் சாய் பல்லவிக்கு பறிபோன பாலிவுட் வாய்ப்பு ? – ரசிகர்கள் கடும் அதிருப்தி.

0
1808
Saipallavi
- Advertisement -

பாலிவுட்டில் உருவாகும் ராமாயண கதையில் சாய்பல்லவிக்கு பதிலாக ஆலியா பட் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸ் ‘ஆதிபுருஷ் ‘ படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 12 ஆம் தேதியே இதன் ரிலீஸ் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு முன்னோட்டமாக வெளியான படத்தின் டீசர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை சந்தித்தன. படத்தின் காட்சிகள் சிறுவர்கள் பார்க்கும் கார்ட்டூன் போல இருப்பதாக நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை வைத்தனர்.

- Advertisement -

ஆதிபுருஷ் படம்:

அதனால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு, படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மெருகேற்றப்பட்டு இப்போது ஜூன் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்போதும் படக்குழுவினர் படத்தின் ரிலீஸீன் போது ஒவ்வொரு காட்சிக்கும் அனைத்து தியேட்டர்களிலும் ஆஞ்சநேயருக்காக ஒவ்வொரு சீட் காலியாக விட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறது. இந்நிலையில் இதற்கு முன்பே 2019 ஆம் ஆண்டு மது மந்தனா தயாரிப்பில் நித்திஷ் திவாரி இயக்கத்தில் ராமாயண கதை எடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

ராமாயண கதை:

அதுவும் இந்த படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்க இருப்பதாக கூறியிருந்தார்கள். மேலும், அதற்கான ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் எல்லாம் நடைபெற்றிருக்கிறது. இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. கேஜிஎப் புகழ் யஷ் ராவணன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறியிருந்தார்கள். இந்த நிலையில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சீதை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை:

அதாவது, சீதை கதாபாத்திரத்தில் முதலில் சாய் பல்லவி நடிக்க இருந்தது. தற்போது சாய் பல்லவிக்கு பதிலாக ஆலியா பட் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு நடத்த பட குழு திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் கமெண்ட்:

தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சாய்பல்லவிக்காக குரல் கொடுத்து வருகிறார்கள். அதில், ரன்வீர் கபூர்- ஆலியா பட், ராமர்- சீதை கதாபாத்திரத்தில் நடிப்பது நன்றாக இருக்கும். ஆனால், சாய்பல்லவி தான் சீதை கதாபாத்திரத்தில் பார்க்க எதிர்பார்க்கிறோம். இந்த படத்திற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று பலரும் சாய்பல்லவிக்கு ஆதரவாக கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

Advertisement