எனக்கு பணம் முக்கியம் இல்லை என்று சமந்தா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாகமாக டாப் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
சமீப காலமாகவே சமந்தா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். இருவரும் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.
சமந்தா நடித்த படங்கள்:
இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பின் இவர்கள் இருவரும் தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தா நடித்து இருந்தார்.
சமந்தா யசோதா :
இந்த படத்தின் மூலம் சமந்தாவுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் சாகுந்தலம், திரில்லர் கதை அம்சம் கொண்ட படம், ஹாலிவுட் படம், குஷி, சாகுந்தலம் போன்ற பல படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் சமந்தாவின் யசோதா படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா உட்பட பலர் நடித்து இருக்கின்றனர்.
சமந்தாவிற்கு வந்த நோய் :
மேலும், வாடகைக்கு தாய் மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சமந்தா Myositis என்னும் Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். கூடிய விரைவில் குணமடைந்து நலமுடன் திரும்புவேன் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் சமந்தா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு கோபம் வரும் போதெல்லாம் நான் ஜிம்முக்கு சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்வேன். அதனால் என்னுடைய கோபம் குறைந்துவிடும்.
பணத்துக்காக அலையமாட்டேன் :
நான் பணம் பெயர் புகழுக்காக அலையமாட்டேன். பணம் எனக்கு முக்கியமே இல்லை. நடிப்பு தான் முக்கியம். நான் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நேசித்து தான் நடிக்கிறேன். செய்யும் வேலையை நேசிக்க முடியாத போது அதில் எந்தவித சந்தோஷமே இருக்காது. எனக்கு நானே பெரிய விமர்சகி. நம்முடைய தவறுகளை நாம் தெரிந்து கொள்ளும்போது தான் தொழிலில் முன்னேற முடியும். காலம் நமக்கு சாதகமாக இல்லாத போது நமக்கு எதுவும் கைகூடாது. அந்த சமயத்தில் அதையே நினைத்து கவலைப்பட மாட்டேன். உனக்கு பிடித்தது போலவே நீ இரு. நீ இந்த பூமியின் மீது வந்தது மற்றவர்களின் பாராட்டை பெறுவதற்கோ அல்லது மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்காகவோ இல்லை. நம்மிடம் இருப்பதை வைத்து சந்தோஷப்பட்டாலே நமக்கு தேவையானது எல்லாம் நம்மை தேடி வரும் என்று கூறியிருக்கிறார்.