மகனின் விவாகரத்து விஷயத்தில் நாகர்ஜூனா பதிவிட்ட பதிவால் கடுப்பான சமந்தாவின் ரசிகர்கள். என்ன காரணம் பாருங்க.

0
613
samantha
- Advertisement -

தன் மகன் மற்றும் சமந்தாவின் விவாகரத்து குறித்து தான் அப்படி ஒரு கருத்தே தெரிவிக்கவில்லை என்று நாகர்ஜுனா போட்ட பதிவு சமந்தாவின் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது. நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்.திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். கடந்த ஆண்டு முழுவதும் இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் சமந்தா அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார்.

-விளம்பரம்-

நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து :

விவாகரத்துக்கு பின்னர் நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி பிசியாக நடித்து வருகிறார். இருந்தாலும் இவர்களுடைய விவாகரத்து குறித்த சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக சைதன்யாவை பிரிவதாக போட்ட பதிவை நீக்கி இருக்கிறார். இதனால் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக சமூக வலைத்தள பக்கங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

- Advertisement -

நாகர்ஜூனா சொல்லாத கருத்து :

இப்படி ஒரு நிலையில் நடிகர் நாகர்ஜுனா, சமந்தா – நாக சைதன்யா இருவருமே நெருக்கமாக தான் இருந்தார்கள். அவர்களுக்குள் எப்படி பிரச்சினை வந்தது என்று எனக்கு தெரியவில்லை.கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தை கூட இருவரும் ஒன்றாக கொண்டாடினார்கள். அதன் பிறகே இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் முதன் முதலில் சமந்தா தான் விவாகரத்து வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என்று கூறியதாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவியது.

நாகர்ஜுனாவின் விளக்கம் :

ஆனால், சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து குறித்து அப்படி ஒரு கருத்தை தான் சொல்லவே இல்லை என்று நாகர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் முற்றிலும் முட்டாள்தனம்!! வதந்திகளை செய்தியாக வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறி உள்ளார்.

-விளம்பரம்-

கடுப்பான சமந்தாவின் ரசிகர்கள் :

நாகார்ஜூனாவின் இந்த விளக்கத்திற்கு பலர் பாராட்டு தெரிவித்தாலும் சமந்தாவின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணமே சமந்தாவின் விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் நாக சைத்னயாவை விட சமந்தாவை தான் அதிகம் விமர்சித்தனர். சமந்தா கருக்கலைப்பு செய்துவிட்டார், சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை, சமந்தாவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்தது என்றெல்லாம் பல விதமான குற்றச்சாட்டுகள் சமந்தா மீது எழுந்தது.

ரசிகர்கள் கேட்கும் கேள்வி :

ஆனால், அப்போது சமந்தா மீது எந்த தவறும் இல்லை என்று ஒரு பதிவை நாகார்ஜூனா போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதனை குறிப்பிட்டே ரசிகர்கள் பலர் ‘சமந்தாவை ஊடங்கங்கள் பல விதமாக பேசிய போது வாய் திறக்காத நீங்கள் தற்போது உங்கள் மகன் பெயர் கெட்டடுப்போக கூடாது என்று இப்படி ஒரு பதிவை போட்டுள்ளீர்கள்’ என்று பலர் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Advertisement