பேமிலி மேன் தொடரில் நடிக்க சமந்தா வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா ? அப்புறம் ஏன் வேணான்னு சொல்லிருக்க போறாரு.

0
858
samantha
- Advertisement -

சமீபத்தில் வெளியான தி பேமிலி மேன் தொடர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா நடிப்பில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ், சந்தீப் கிஷன் போன்றவர்கள் நடித்துள்ள தி பேமிலி மேன் வெப் தொடர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த தொடரின் ட்ரைலர் வெளியான போதே இந்த தொடரில் தமிழகர்களை தீவீரவாதிகளாக காட்டவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் இந்த தொடரை புறக்கணிக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றன.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் நடிக்க நடிகை சமந்தா பெற்ற சம்பளம் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தொடரில் நடிப்பதற்காக நடிகை சமந்தாவிற்கு 4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக ஒரு படத்தில் நடிக்க நடிகை சமந்தா 1.5 கோடி முதல் 2 கோடி ரூபாயை சம்பளமாக பெருகிறாராம். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் நடிக்க இரண்டு மடங்கு சமபளத்தை பெற்றுள்ளார் சமந்தா.

இதையும் பாருங்க : காதலன்ல ஏஆர் போட்ட பிட்டை படிக்காதவன் படத்தில் பாட்டாக போட்டுள்ள மணிசர்மா. வீடியோவ பாருங்க கண்டுபிடிச்சிடுவீங்க.

- Advertisement -

பேமிலி மேன் தொடரில் நடிக்க ஒப்புக்கொண்ட காரணம் குறித்து பதிவிட்ட சமந்தா, உங்கள் அணைத்து விமர்சனங்களையும், கமெண்டுகளை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன். ராஜி எப்போதும் எனக்கு ஸ்பெஷல் தான். இந்த வெப் சீரியஸ் நடிப்பதற்கு முன்பு ராஜன் என்னிடம், இலங்கைத் தமிழர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதையும் ஈழப்போரில் பெண்களின் உண்மை கதைகளை உள்ளடக்கிய ஆவண புகைப்படங்களை எனக்கு கொடுத்தார். அந்த ஆவண புகைப்படத்தில் சில ஆயிரம் ஈழத் தமிழர்கள் மட்டும் படத்தில் இருப்பதை பார்த்தேன்.

Samantha Akkineni is unrecognisable in this unseen still from The Family  Man 2 | Entertainment News,The Indian Express

ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த பிறகும் ஏன் இதனை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்பதையும் உணர்ந்தேன். மேலும் இந்தப் போரினால் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்து பல்வேறுவிதமான நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களின் அவலத்தையும் கண்டேன .அதனைப் பார்த்த பிறகுதான் இந்த கதாபாத்திரத்தை ஏற்றேன். இந்த கதாபாத்திரம் கற்பனையாக இருந்தாலும் ஈழப்போரில் தங்களது உயிரை விட்டவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement