இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியானது அறம் திரைப்படம். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் விமர்சனங்களைப் பெற்றதுடன் வசூல் நல்ல ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும், இந்த படத்தில் நயன்தாராவிற்கும் நல்ல பெயர் கிடைத்தது.
இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஒரு மாவட்ட ஆட்சியாளராக நடித்திருந்தார். தமிழகத்தில் நடந்த பல்வேறு பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் நயன்தாராவிற்கு ஒரு மயில் கல்லாக அமைந்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா ஹீரோயின் சப்ஜெக்ட் கைதிகளில் மேலும் கவனம் செலுத்தினர்.
இதையும் பாருங்க : இன்றைய ப்ரோமோவில் கவினிடம் பேசிய கீர்த்திகா யாரு.!
இந்நிலையில் அறம் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அறம் 2 படத்தை இயக்க உள்ளதாக கோபி நயினார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாராவிற்கு பதில் சமத்தா நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நயன்தாரா தற்போது தர்பார் மற்றும் பிகில் படத்தில் நடித்து வருவதால் அறம் 2 படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் சமந்தா மாவட்ட ஆட்சியர் புதிதாக மக்கள் இயக்கம் ஒன்று துவங்கி மக்களுக்காக போராட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.