தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயின் சமந்தா. கிட்டத்தட்ட மிகச் சிறு வயதில் இருந்தே ஹீரோயினாக நடிப்பதற்காக உழைத்து முன்னேறியவர் சமந்தா. தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.
கிட்டத்தட்ட தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் முன்னணி ஸ்டார் நடிகர்கல்4 அனைவருடனும் நடித்துவிட்டார். தற்போது இரண்டு மொழிப்படங்களிலும் தனக்கென ஒரு நல்ல மார்க்கெட்டை வைத்துள்ளார்.
தற்போது ஒரு சினிமா குடும்பத்தில் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டாலும் இவரது ஆரம்ப கால வாழ்க்கை மிக கடினமானது என சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சமந்தா.
என 14 வயதில் இருந்தே நான் வீட்டில் எந்த ஒரு காசு பணமும் நான் வாங்கியதில்லை. அப்போதிலிருந்தே என் செலவை நான் மட்டுமே பாரர்த்துக்கொள்கிறேன். இதற்காக பல சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். அப்படி தான், 14 வயதில் 1000 ரூபாய் பணத்திற்காக ஒரு திருமண விழாவில் ரிசெப்ஷனில் பன்னீர் தெளிக்கும் பெண்ணாக நின்று சம்பாரித்தேன். என தனது கஷ்ட காலங்களை பற்றி கூறினார் சமந்தா.