சகுந்தலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தா கண் கலங்கி அழுதுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சம்ந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா அந்த “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.
#GunaSekhar and #Samantha becomes emotional while thanking #Dilraju garu for his support for #Shaakuntalam pic.twitter.com/mHuVthiOvs
— Cinema Desam (@CinemaDesam) January 9, 2023
சமீப காலமாக தெலுகு சினிமாவில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா தனக்கு Myositis என்னும் Autoimmune தன்னை தாக்கியுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை தற்போது எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார். இதற்காக தொடர் சிகிச்சை மேற்கொண்டு வரும் சமந்தா இந்த பிரச்சனை காரணமாக சில படங்களில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது.
நடிகை சமந்தா உடல்நிலை சரியில்லாத போதிலும் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்த வருகிறார். சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படத்தின் போது தான் இவருக்கு காலில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால், அந்த வலியுடன் தான் இந்த படத்திற்கான டப்பிங் பேசி முடித்தார் சமந்தா. அப்போது வெளியான புகைப்படங்களை கண்டு சமந்தாவின் அர்ப்பணிப்பை பலரும் பாராட்டி இருந்தார்கள்.
Strength thechukuni mari attend aindhi mana kosam. #Samantha voice lo a pain chepthundhi how much she is going through ani. @Samanthaprabhu2 papa stay strong. Trailer adiripoindhi movie kuda blockbuster pakka. Stay strong. We love you so muchhhh. #Shaakuntalam #SamanthaRuthPrabhu pic.twitter.com/DuaTRKQCMj
— Ramya1494💕💕 (@Ramya1494_Sam) January 9, 2023
இந்த நிலையில் யசோதா திரைப்படத்திற்கு பின்னர் நடிகை சமந்தா சகுந்தலம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை குணசேகரன் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. மிகவும் புகழ் பெற்ற சகுந்தலை புராண கதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நகல்லா, பிரகாஷ்ராஜ் மதுபாலா போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள்.
மேலும், இந்த படத்தில் அல்லு அர்ஜுனனின் மகலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இந்த திரைப்படத்தின் இயக்குனர் இந்த படத்தில் உண்மையான ஹீரோ சமந்தா தான் அவரது கதாபாத்திரத்தில் பலரை நடிக்க வைக்க முயன்றேன்.
ஆனால், தயாரிப்பாளர் நீலிமா இந்த கதாபாத்திரத்தில் சமந்தா தான் நடிக்க வேண்டும் என்று கூறியதாக தெரிவித்தார். இயக்குனரின் இந்த பேச்சை கேட்ட சமந்தா மேடையில் கண் கலங்கி அழுதார்.அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர்கள் பலரும் சமந்தாவை உற்சாகப்படுத்தினர். இதைத் தொடர்ந்து பேசிய நடிகை சமந்தா எனக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் ஒன்று மட்டும் எப்போதும் மாறியது கிடையாது. அது சினிமா மீது நான் வைத்திருக்கும் அன்பு தான். அதே போல சினிமாவும் எனக்கு நிறைய அன்பை கொடுத்து இருக்கிறது. சகுந்தலா படத்தின் மூலம் இந்த அன்பு அதிகரிக்கும் என்று நம்புகிறேன் என்று உருக்கமுடன் பேசி இருக்கிறார் சமந்தா.