தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் எவ்வளவு பெரிய மாஸ் ஹீரோ என்பது தெரியும். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சர்கார் படத்துடன் பெட்டிகட படத்தை வெளியிடலாம் என்று சொன்ன இயக்குனரிடம் நடிகர் சமுத்திரக்கனி கேலி செய்துள்ளார்.
சமுத்திரக்கனி நடித்துள்ள புதிய படமான ‘பெட்டிக்கடை’ என்ற படத்தை இசக்கி கார்வண்ணன் என்பவர் இயக்கியுள்ளார்.லட்சுமி க்ரியேஷன் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தின் இசையை பாரதி ராஜா வெளியிட்டார்.
இந்த விழாவில் பேசிய சமுத்திரக்கனி, இளம் கன்று பயமறியாது என்று சொல்வார்கள் அதை போல இந்த படத்தை விஜய்யின் சர்கார் படத்துடன் வெளியிடலாம் என்று இயக்குனர் என்னிடம் சொன்னார்.
நான் காமெடி பண்ணாதீங்க வெளிய போங்கன்னு தள்ளி விட்டுட்டேன். பின்னர் அவரிடம் நமக்குன்னு ஒரு நேரம் இருக்கு அப்போ பனிக்காலம் போங்கன்னு சொல்லிட்டேன் என்று காமிடியாக கூறி இருந்தார் இதனை கேட்ட அருகில் இருந்தவர்களும் சிரித்து விட்டனர்.