ரவி அப்படி பண்ணதால நேரா ஆபீஸ்கே போனேன் – ரவிக்கு ஆதரவாக பேசிய நபருக்கு சம்யுக்தா கொடுத்த விளக்கம்.

0
4746
Samyuktha
- Advertisement -

கடந்த சில நாட்களாக யூடுயூபில் பெரிய பஞ்சாய்த்தாக சென்று கொண்டு இருப்பது விஷ்ணுகாந்த் – சம்யுக்தா விவகாரம் தான். இந்த நிலையில் இவர்களது பஞ்சாயத்தில் புதிததாக சிக்கி இருப்பவர் vj ரவி. சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா கடந்த மார்ச் மூன்றாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இவர்களுடைய திருமண வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்ட தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், திருமணம் ஆன 15 நாட்களிலேயே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. திருமணத்திற்கு பின்னர் சம்யுக்தா தன் நண்பர்களுடன் பேசி வந்ததால் தான் இருவருக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக விஷ்ணுகாந்த் பேட்டி அளித்து இருந்தார்.

- Advertisement -

ஆதாரங்களை வெளியிட்ட விஷ்ணுகாந்த் :

அதில் அவர் சம்யுக்தா குறித்து பல குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். ஆனால், விஷ்ணு சொல்வது எல்லாம் பொய் என்று சம்யுக்தா கூறி இருந்தார். அதோடு அவருக்கு 24 மணி நேரமும் செக்ஸ் தான் முக்கியம் என்றும் கூறி இருந்தார்.இதனால் சம்யுக்தாவிற்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை விஷ்ணுகாந்த் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் விஷ்ணுகாந்தை காதலிப்பதற்கு முன்பாகவே நடிகை சம்யுக்தா, ரவி என்பவரை காதலித்து இருக்கிறார்.

எல்லை மீறிய ரவி :

ரவி வேறு யாரும் கிடையாது சம்யுக்தாவுடன் ஏற்கனவே நிறைமாத நிலவே என்ற தொடரில் நடித்தவர்கள் தான். உண்மையாகவே இவர்கள் இருவரும் காதலித்து இருக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் சமித்தாவிடம் ரவி எல்லை மீறி இருக்கிறார். இதனால் தங்கள் இருவருக்கும் பொதுவான நபர்களிடம் ரவி குறித்து தெரிவித்து இருக்கிறார் சம்யுக்தா. ஆனால், சம்யுக்தா தன் பெயரை கெடுக்க இப்படி எல்லாம் செய்கிறார் என்று ரவி தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

ரசிகர் கேட்ட கேள்வி :

இப்படி ஒரு நிலையில் சம்யுக்தாவின் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் ஒருவர் ‘ அக்கா ஏன் ரவி அண்ணா மேல தப்பு தப்பா பழி சுமத்துறீங்க. அவங்க அப்படி என்ன துரோகம் உங்களுக்கு பண்ணிட்டாங்க? ரொம்ப கஷ்டமா இருக்கு. ரவி அண்ணா மேல இப்படி எல்லாம் பழி சொல்லாதீங்க. ரவி அண்ணா ரொம்ப ஜெனியூன் மேன். நானும் உங்களோட ஃபேன் தான். ரெண்டு கண்ணுல எந்த கண்ணு வேணும்னு கேட்டா நான் எப்படி சொல்லுவேன்.

நீங்க ரெண்டு பேரும் எனக்கு இம்பார்டன்ட் தான். நீங்க ரவி அண்ணாவை லவ் பண்ணி இருக்கீங்க பட் அவங்க அக்செப்ட் பண்ணலன்னு இப்படி தப்பா சொல்ல கூடாது!? அக்கா ஐ அம் வெரி சேட் என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்த சம்யுக்தா ‘ஒரு ரசிகரா உங்களுடைய பீலிங்ஸ் நான் ரெஸ்பெக்ட் பண்ணுறேன். நான் அவர் கூட ஒரு வருஷம் டிராவல் பண்ணி இருக்கேன். உங்களுக்கு நாங்க ஆன்ஸ்கிரீன்ல என்ன நாங்க நடிச்சமோ அது மட்டும்தான் தெரியும்.

உண்மை அக்சப்ட் பண்ணி தான் ஆகணும்

உங்களுக்கு அவர் பிடிக்கும் நான் அவருக்கு சப்போர்ட் பண்ணுங்க பட் உண்மை அக்சப்ட் பண்ணி தான் ஆகணும். என்னை அவர் அக்செப்ட் பண்ணல என்கிறதுக்காக நான் அவர் மேல இப்படி பழி சொல்லணும்னு சொல்றதுக்கு ரொம்ப சீப்பா இருக்கு.உண்மையா அவர் அப்படி பண்ணுனதுனால தான் அடுத்த நாள் நான் என் டியூப் லைட் ஆபிஸ்க்கு போய் இனிமே நான் அவர்கூட நடிக்க மாட்டேன் என்று சொல்லி சேனல் கிட்டையே சண்டை போட்டுட்டு அடுத்த அவர் வீட்டுக்கு போய் அவங்க அம்மா கிட்டேயும் கம்ப்ளைன்ட் பண்ணிட்டு வந்துட்டேன். அது எப்படி டா என்னையே நான் அசிங்கப்படுத்தப்பேன். அப்ப கூட நான் இந்த மீடியாக்கு எடுத்துட்டு வரல பட் நான் என் அண்ணன்னு நெனச்சு ஒருத்தர்கிட்ட சொன்னேன்.

நான் எந்த பொய்யும் சொல்லல

அவர் தான் கேவலமா ரெக்கார்ட் பண்ணி விஷ்ணுகாந்துக்கு அனுப்பி, அவர் அதை மீடியால கொடுத்து இப்ப பெரிய நியூஸா போயிட்டு இருக்கு. ஒரு பொண்ணு வெட்கத்தை விட்டு ஓபனா இதை சொல்றத சுச்சுவேஷனுக்கு வந்து இருக்கானா, அவ எவ்ளோ கஷ்டத்துல இருப்பா? அத உங்களுக்கு புரிஞ்சிக்க முடியல. ஆனாலும் ஓகே நான் எந்த பொய்யும் சொல்லல. பொய் சொல்றதுக்கான அவசியமும் எனக்கு கிடையாது என்று பதில் கொடுத்திருக்கிறார்.

Advertisement