பிக் பாஸ் நிகழ்ச்சியை இப்படி நடத்துங்கள் – சனம் ஷெட்டி வைத்த கோரிக்கை , என்ன சொல்லி இருக்காரு பாருங்க?

0
189
- Advertisement -

பிக் பாஸ் 8 நிகழ்ச்சி குறித்து சனம் ஷெட்டி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைராக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 99 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், ஜெப்ரி, அன்ஷிதா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

கடந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். பின் கடந்த 13 வது வாரத்திற்கான நாமினேசனில் ராணவ், மஞ்சரி வெளியேறி இருந்தார்கள். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டி, சண்டை, சச்சரவு எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் எட்டு போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே வெளியே போயிருந்த போட்டியாளர்களில் எட்டு பேர் உள்ளே வந்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இவர்கள் வந்தவுடன் பிக் பாஸ் வீடே ரணகளமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் போட்டியாளரும் தங்களுடைய கருத்துக்களை சொல்வதாக மற்ற போட்டியாளர்களை வைத்து செய்கிறார்கள். அதோடு உள்ளே நுழைந்திருக்கும் எட்டு போட்டியாளர்களில் இரண்டு பேர் ஃபைனலிஸ்ட் ஆக வாய்ப்பு இருப்பதாக பிக் பாஸ் அறிவித்து இருந்தார். இதனால் போட்டியாளர்களும் மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

டபுள் எவிக்ஷன்:

இதை அடுத்து இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டபுள் எவிக்ஷன் நடந்து இருக்கிறது. அதில் அருண் பிரசாத், தீபக் தான் வெளியேறி இருக்கிறார்கள். இவர்களுடைய எவிக்சன் பலருக்குமே அதிர்ச்சி தான். காரணம், இவர்கள் டாப் 5ல் வருவார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். அதிலும் பிக் பாஸ் வீட்டில் வலுவான போட்டியாளர்களில் முக்கியமானவர் தீபக். இவர் எலிமினேட் ஆகியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது.

இந்த எவிக்ஷன் சரி கிடையாது, ஏற்றுக்கொள்ள முடியாது, அன்ஃபார் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கூறி இருக்கிறார்கள். சில நேரங்களில் இந்த மாதிரி எவிக்ஷன் நடப்பது உண்டு. இந்த நிலையில் இது தொடர்பாக நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான சனம் செட்டி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இந்த பிரச்சினையை தீர்க்க ஒரே வழி பிக் பாஸ் வாக்கெடுக்கும் நிலவரத்தை பற்றி மக்கள் அறிந்து கொள்ளுமாறு பப்ளிக்காக செய்ய வேண்டும். இல்லை என்றால் , நிகழ்ச்சியை பிரைவேட் ஆக்கி விடுங்கள்.
அதற்குப் பிறகு ஓட்டிங் இருக்காது. அதனால் யாரும் அதைப்பற்றி கேள்வி கேட்கவும் மாட்டார்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement