சிறப்பாக விளையாடிய ஜடேஜா.! ட்வீட் செய்து வாங்கி கட்டிக்கொண்ட சஞ்சய் மஞ்சுரேகர்.!

0
3343
Sanjay
- Advertisement -

உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி நேற்று வெளியேறியது. தொடர் வெற்றிகளை ருசித்து வந்த இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மோதியது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

-விளம்பரம்-

நேற்றைய போட்டியில் தனது விடுபட்ட ஆட்டத்தை தொடங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ரன்கள் குவித்தது. ஆனால், இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் கைவிட்ட போதும் சிறப்பாக விளையாடிய ஜடேஜா 59 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று இறுதியில் அவுட்டானார்.

- Advertisement -

அவர் அவுட் ஆனதும் இந்திய அணி இன்னிங்ஸ் முடிந்து விட்டது என்று இந்திய ரசிகர்கள் பலரும் வருத்தம் அடைந்தனர். தோனி 50 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா குறித்து ட்வீட் செய்து ரசிகர்களின் ஒட்டு மொத்த எரிச்சலுக்கு உள்ளாகியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சுரேகர்.

அவ்வப்போது தனது சர்ச்சையான கருத்துக்களால் இந்திய அணியை சீண்டி வருபவர் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இவர் தற்போது வர்ணனையாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய அரையிறுதிப் போட்டியின் போது ஜடேஜா சிறப்பாக விளையாடினர் என்று இன்று காலை ட்வீட் செய்தார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

-விளம்பரம்-

சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்த டீவீட்டை கண்டு கடுப்பான பல ரசிகர்கள், சஞ்சய் மஞ்ச்ரேக்கரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமே, ஜடேஜா குறித்து ஏற்கனவே விமர்சித்திருந்த சஞ்சய் மஞ்சுரேகர், ஜடேஜா ஆல்-ரவுண்டராக இருந்தபோதும் மாற்று வீரர் ஆகவே இந்திய அணியில் விளையாடி வருகிறார். இவருக்கு வாய்ப்பு வழங்குவதை விட வேறு ஒரு பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளரை தேர்வு செய்வது தான் சிறந்தது என்று குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement