விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார்.
சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பாக நடிகை மானஸா, மானஸ் என்ற நடன இயக்குனரை காதலித்து வந்தார். சில ஆண்டுகள் தொடர்ந்த இவர்களது திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரிவில் முடிந்தது. இதையடுத்து மானஸ், சுபிக்ஷா என்பவரை காதலிக்க துவங்கினர்.
இதையும் படியுங்க : ராஜா ராணி சஞ்சீவ் இஸ்லாம் மதத்தை சார்ந்தவரா…? அல்யா மானஸா வெளியிட்ட உண்மையான பெயர்..!
Read more at:
அதே போல நடிகை மானஸாவும் ராஜா ராணி சீரியலில் நடித்து வந்த சஞ்சீவை காதலிக்க துவங்கினர். இவர்கள் இருவரும் காதலை தெரிவித்த பின்னர் இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வாரகள் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் சில சமூக வலைகளத்தில் வைரலாக பரவி வந்தது. இதனால் இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதா என்று இவர்களது ரசிகர்கள் நினைத்து வந்தனர். ஆனால், இந்த புகைப்படங்கள் விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்டது என்று பின்னர் தெரியவந்துள்ளது.