மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், ஆம்பள, கலகலப்பு-2 ஆகிய படங்களில் காமெடி நடிகராக நடித்திருப்பவர் காமெடி நடிகர் ஜார்ஜ். இவருடைய தனித்துவமான நடிப்பிற்காக மக்களிடம் ரீச் ஆனவர்.
தற்போது பல நடிகர்கள் பற்றியும் பேசியுள்ளார்..நடிகர் கமலுக்கு ஈடான ஒரு நடிகர் தற்போது வரை யாரும் இல்லை. அதற்கு இன்னும் 50 வருடம் ஆகும்.
தளபதி விஜய் மெர்சல் படத்தின் மூலம் எங்கேயோ சென்றுவிட்டார். அதேபோல் இயக்குனர் ஷங்கர் மாதிரி யோசிக்க யாராலும் முடியாது.
சந்தானம் ஒரு நல்ல காமெடி நடிகர். ஆனால் கவுண்டமணியை போல கிடையாது. காமெடியில், கருத்தில் ஏதாவது தவறு என்றால்தான் கவுடன்மணி நம்மை கலாய்த்து பேசுவார்.
ஆனால் சந்தானம் நம் உடல் குறையை வைத்து கலாய்ப்பார். அது சில நேரங்களில் நம் மனதிற்கு வருத்தமாக இருந்தது. ஆனால் மக்கள் ஏற்றுக்கொண்டதால் அதனை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.ஆனால் சந்தானம் இந்த கொள்கையை மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும்,என பேசினார் ஜார்ஜ்.