சாந்தனுவின் புதிய படத்தின் டைட்டிலை கேட்டு மெசேஜ் செய்த விஜய்.! ஏன் தெரியுமா.!

0
1082
Santhanu
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் தான் பல இளம் நடிகர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் என்றே கூறலாம். பொது ரசிகர்களை தாண்டி பல்வேறு நடிகர், நடிகைகளும் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் நடிகர் பாக்கியராஜின் மகனும் நடிகருமான சந்தானு நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். அதுமட்டுமல்லாமல் விஜய் குடும்பமும் பாக்கியராஜ் குடும்பமும் நீண்ட வருடங்களாக நெருங்கிய நட்பில் இருந்து வந்தனர். சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் பாக்யராஜ் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தந்தார்.

- Advertisement -

ஆனால், சந்தனுவோ, சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” ! என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான். என்று ட்விட்டரில் பதிவிட்டு விஜய் ரசிகர் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

இந்த நிலையில் சாந்தனு புதிய படத்திற்கு இராவணகோட்டம் என்று தலைப்பை வைத்துள்ளனர். இந்த படத்திற்காக சாந்தனுவிற்கு , விஜய் தொலைபேசி மூலம் மெசேஜ் செய்து “வாழ்த்துக்கள் நண்பா, டைட்டில் செம்ம” என்று கூறினாராம். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement