என்ஜாய் எஞ்சாமி பிரச்சனை, நம்பரையே பிளாக் செய்துள்ள அறிவு – வருத்தத்துடன் பேசிய சந்தோஷ் நாராயணன்.

0
209
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போதும் மிகவும் பிரபலமான ராப் பாடகராக திகழ்ந்து வருபவர் அறிவு. தாழ்த்தப்பட்ட மக்களின் வலிகளை ரேப் இசை பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். அதிலும் இவர் எழுதிய ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் இந்திய அளவில் பிரபலமடைந்தது. மேலும், இந்த பாடல் இந்திய அளவில் எந்த அளவிற்கு ஹிட் அடைந்தது என்பது நாம் அனைவரும் அறிவோம். இப்படி ஒரு நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விழாவில் அறிவு கலந்துகொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரம்மாண்ட செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் எஞ்சாயி எஞ்சாமி பாடலை பாடகி தீ பாடி இருந்தார். ஆனால் , இந்த பாடலின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்த அறிவு இந்த விழாவில் வரவில்லை.

- Advertisement -

புறக்கணிக்கப்பட்ட அறிவு :

இந்த விவகாரம் குறித்து பாடகர் அறிவு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் ‘ நான் “இசையமைத்தேன்” “எழுதினேன்” , பாடினேன்” & “நடித்தேன்” என்ஜாமியை அனுபவிக்கவும். இதை எழுத யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையோ கொடுக்கவில்லை. இப்போது இருக்கும் அனைத்திற்கும் கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் கழித்தேன். இது ஒரு சிறந்த குழுப்பணி என்பதில் சந்தேகமில்லை. அது அனைவரையும் ஒன்றாக அழைக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அறிவின் ஆதங்க பதிவு :

ஆனால் அது வள்ளியம்மாளின் சரித்திரமோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமை என் முன்னோர்களின் சரித்திரமோ அல்ல.என்னுடைய ஒவ்வொரு பாடலும் இந்த தலைமுறை ஒடுக்குமுறையின் அடையாளமாக இருக்கும். இந்நாட்டில் 10000 நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன. முன்னோர்களின் மூச்சு, அவர்களின் வலி, அவர்களின் வாழ்க்கை, அன்பு, அவர்களின் எதிர்ப்பு மற்றும் அவர்களின் இருப்பு பற்றிய அனைத்தையும் சுமந்து செல்லும் பாடல்கள்.

-விளம்பரம்-

முடிவில் எப்பொழுதும் உண்மையே வெல்லும் :

இது அனைத்தும் அழகான பாடல்களில் உங்களிடம் பேசும். ஏனென்றால் நாம் இரத்தமும் வியர்வையுமான விடுதலைக் கலைகளின் மெல்லிசைகளாக மாறிய தலைமுறை. பாடல்கள் மூலம் பாரம்பரியத்தை எடுத்துச் செல்கிறோம். நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் அது நடக்காது. ஜெய்பீம். முடிவில் எப்பொழுதும் உண்மையே வெல்லும்” என பதிவிட்டு இருந்தார்.

சந்தோஷ் நாராயணன் விளக்கம் :

இந்த விவாகரத்திற்கு பின்னர் சந்தோஷ் நாராயணன் – அறிவு கூட்டணி பிரிந்துவிட்டது. இப்படி ஒரு நிலையில் நீயே ஒளி இசைக்கச்சேரி வரும் பிப்ரவரி 10-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த விழா குறித்து பேசிய சந்தோஷ் நாராயணன் ‘ அறிவுக்கு இன்வைட் அனுப்பியிருக்கிறேன். அவர் என் நம்பரை பிளாக் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அவர் அதனைப் பார்த்துவிட்டு வந்தால் மகிழ்ச்சி. தீ மற்றும் அறிவு பாடிய பாடல்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றன. ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் பிரச்னையால்தான் அவை அப்படியே இருக்கின்றன. காத்திருந்தால் எல்லாம் சரியாகும். கோபமாக இருப்பவர்கள் எதனால் இந்தப் பிரச்னை நடந்தது எனப் புரிந்தபின் சரியாகிவிடும். அதற்காக நான் காத்திருக்கிறேன்” என்றும் கூறியிருக்கிறார். 

Advertisement