தமிழ் சினிமாவில் விஜய் ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருகிறார். அவருடன் நடிக்க முடியவில்லை என்று பல நடிக நடிகைகள் வருத்தத்தில் உள்ளனர். அந்த வகையில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் அவர்கள் விஜய்க்கு அம்மாவாக நடிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழில் கமலஹாசன் நடித்த “நாயகன்” படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். தற்போது பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். மேலும், குணச்சித்திர பெரும்பாலான பல முன்னனி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
இதையும் படியுங்க : நஸ்ரியா பகத் பாசிலை திருமணம் செய்ததற்கு நான் தான் காரணம்.! விஜய் பட நடிகை பேட்டி.!
அம்மா கதாபாத்திரத்தில் சீரியஸான ரோலாக இறந்தாலும் சரி, காமெடியான அம்மாவாக இருந்தாலும் சரி இவர் நடிப்பில் பட்டையை கிளப்பிவிடுவார். பல இளைஞர்களும் இவரது நடிப்பை பார்த்து இப்படி ஒரு அம்மா தங்களுக்கு கிடைக்க கூடாதா என்று ஏங்கியுள்ளனர்.
சமீபத்தில் சரண்யா அவர்கள் ‘ நான் தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துவிட்டேன், விஜய்க்கு மட்டும் அண்ணியாக தான் நடித்துள்ளேன், அந்த வருத்தம் கொஞ்சம் உள்ளது’ என கூறியுள்ளார்.