சுப்ரீம் ஸ்டார் பெருசா ? சூப்பர் ஸ்டார் பெருசா ? – கொந்தளித்த சரத்குமார்

0
430
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் வரும் பொங்களை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி வெளியானது. பரபரப்பாக சென்று கொண்ட வசூல் வேட்டையில் தொடக்கத்தில் அஜித் நடித்த “துணிவு” திரைப்படம் அதிக வாசல் செய்திருந்தாலும் பின்னர் விஜய்யின் “வாரிசு” குடும்ப படம் என்பதினால் வசூலில் தற்போது முன்னிலை வகித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரபூர்வ அறிவிப்பு கிடையாது.

-விளம்பரம்-

விருந்தளித்த விஜய் :

மேலும் வாரிசு படம் ஆந்திராவில் நேற்று முன்தினம் 14ஆம் தேதி வெளியான நிலையில் வசூல் உலகளவில் அதிகரித்து இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் இரு தரப்பினரிடம் இருந்தும் அதிகாரப்பூர்வ வசூல் என்னவென்று அறியலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் வாரிசு படம் வெற்றியாக சென்று கொண்டிருப்பதினால் நடிகர் விஜய் வாரிசு படக்குழுவினரை அழைத்து சென்னயில் உள்ள ஈசி ஆரில் உள்ள பெரிய நட்சத்திர விடுதியில் அவர்களுக்கு விருந்தளித்தார்.

- Advertisement -

வெற்றி விழா

இதற்கு பிறகு சென்னையில் வாரிசு படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் வம்சி படிப்பள்ளி, நடிகர் ஷாம், சரத்குமார், விடிவி கணேஷ், நடிகை சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து பேசிய இயக்குனர் வம்சி கூறுகையில் `எல்லோரும் என்னை தெலுங்கு இயக்குனர் என்று கூறினர். அது என்னை மிகவும் மனதளவில் காயப்படுத்தியது.

வம்சி படிப்பள்ளி கூறியது :

நான் தமிழனோ அல்லது தெலுங்கனோ அல்ல நான் ஒரு நல்ல மனிதன். இன்றைக்கு தமிழ் மக்கள் மனதில் எனக்கு ஒரு சிறிய இடம் கொடுத்திருக்கிறார்கள், அதற்கு நான் என்றும் கடமை பட்டவனாக இருப்பேன் என்று உருக்கமாக பேசினார். இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகர் சரத்குமாரிடம் செய்தியாளர்கள் விஜய் சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து கேட்டனர். இதற்கு முன்னரே இசை “வாரிசு” இசை வெளியிட்டு விழாவில் சரத்குமார் விஜய் தான் சூப்பர்ஸ்டார் என்று கூறியது பெரும் சர்ச்சையில் சிக்கியது.

-விளம்பரம்-

சூப்பர் ஸ்டார் பெருசா? சுப்ரீம் ஸ்டார் பெருசா? :

இந்த நிலையில் தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ள சரத்குமார் கூறுகையில் “என்னுடைய மகனுக்கு நான் சூப்பர் ஸ்டார், அதே போல என்னுடைய அப்பா எனக்கு சூப்பர் ஸ்டார். அதனை போலத்தான் கூறினேன் அவர் அடுத்த முதல்வர் ஆவார் என்றோ அல்லது பிரதமர் ஆவர் என்றோ கூறவில்லை என்று கூறினார். மேலும் அப்போது விஜய் எப்படி சூப்பர் ஸ்டார் என கூறலாம் என்ற கேள்விக்கு கோவப்பட்ட சரத்குமார் “நான் சுப்ரீம் ஸ்டார், எனவே சூப்பர் ஸ்டார் பெரியதா? அல்லது சுப்ரீம் சூப்பர் ஸ்டார் பெரியதா? என்ற கேள்வி எழுப்பினர் சரத்குமார்.

மேலும் கூறுகையில் இந்த பிரச்சனையை பெரிதாக ஆக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். மேலும் ஒரு பத்திரிகையாளர் உங்களை சுப்ரீம் ஸ்டார் என அழைக்கலாமா என கேட்டதற்கு அப்படி கூறினால் நான் மகிச்சியடைவேன் என்று கூறினார். இறுதியாக நான் விஜய்யை மட்டுமே சூப்பர் ஸ்டார் என கூறவில்லை என்றும் தான் அறிவுள்ளவன், நான் படித்திருக்கிறேன் என்றும் கோவகமாக பதிலளித்தார் சரத்குமார்.

Advertisement