அதன் பின்னர் வந்த அனைத்து பாகத்திலும் சரவணன் கதாபாத்திரம் மாறினாலும் மீனாட்சியின் கதாபாத்திரத்தில் ரச்சிதா மட்டுமே நடித்து வருகிறார். மேலும் நிகழ்ச்சி நிகழ்ச்சி 1000 எபிசோடிற்கும் மேல் ஓடி சாதனை படைத்தது.இந்நிலையில் இந்த தொடரில் நடித்த விரைவில் தனது கணவருடன் சேர்ந்து ஒரு மெகா தொடரில் நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததர்காக விருது ஒன்று வழங்கப்பட்டது அந்த விருதை பெற்றுக் கொண்ட ரச்சிதா இந்த விருதை தான் அந்த சீரியலில் நடித்தது போதும் என்று நினைத்து தன்னை சென்ட் ஆப் செய்வது போல தெரிகிறது என்று தெரிவித்தார்.
இதனால் இவர் அந்த தொடரில் இருந்து விரைவில் விலகிவிடுவரோ என்று அனைவரும் எண்ணினார். ஆனால் தற்போது ரச்சிதா தனது கணவர் தினேஷுடன் புதிய சீரியலில் நடிக்கப்போவதாக அறிவித்ததும், இவரது ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.ஆனால் இவர் நடிக்க போகும் அந்த புதிய தொடரின் பெயர் என்ன?எந்த தொலைகட்சியில் அது ஒளிபரப்பாக போகிறது ?போன்ற விஷயத்தை ரச்சிதா தெரிவிக்காமல் சஸ்பென்ஸாக வைத்து விட்டார்.




