8 ஆண்டு குறை தீர்ந்தது, கர்ப்பமான ஸ்ரீஜா, அப்பாவாக போகும் மகிழ்ச்சியில் செந்தில் – சீமந்த புகைப்படங்கள் இதோ.

0
698
Senthil
- Advertisement -

விஜய் டிவி சீரியலுக்கு என்றே பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களெல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் தொடர்களில் ஒன்றாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் திகழ்ந்து வந்தது. இந்த சீரியல் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகி இருந்தது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் பாகம் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது.

-விளம்பரம்-

இந்த தொடரின் முதல் பாகத்தில் செந்தில், ரக்ஷா, ராஷ்மி என்று பலர் நடித்து இருந்தனர். மேலும், இந்த தொடர் நன்றாக தான் சென்றது. பின் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் பலர் விலகி இருந்தார்கள். இதனால் இந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு வேறொரு கதை களத்தில் அதே பெயரில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியல் ஒளிபரப்பானது.

- Advertisement -

இதையும் பாருங்க : அப்போ ராஜ ராஜ சோழர் இந்து கிடையாதா ? வெற்றிமாறன் பேச்சால் ரசிகர்கள் கேள்வி. வைரலாகும் வீடியோ இதோ.

சரவணன் மீனாட்சி தொடர் :

இதில் செந்தில்குமார் அவர்கள் மாயன், மாறன் என்ற இரு வேடத்தில் நடித்து இருந்தார். பெரும் வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் திடீர் என்று இழுத்து முடியாது விஜய் டிவி. இந்த தொடரில் நாயகனாக நடித்த செந்தில் ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் முதன் முதலாக ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜே வாக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் புகழ் பெற்ற சீரியலாக இருந்தது “சரவணன் மீனாட்சி”.

-விளம்பரம்-

செந்தில் நடித்த படங்கள் :

இந்த சரவணன் மீனாட்சி தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் செந்தில். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்ரீஜா.சின்னத்திரையில் சூப்பர் ஜோடியாக கலக்கிய இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் கணவன், மனைவியாக ஒன்று சேர்ந்தனர். சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு செந்திலுக்கு சினிமாவில் நடிக்க பட வாய்ப்புகள் வந்தது.

ஸ்ரீஜா செந்தில் திருமணம் :

இவர் தவமாய் தவமிருந்து, செங்காத்து பூமியிலே, கண்பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.ஆனால், சினிமாவில் இவருக்கு பெரிய அளவு மக்கள் மத்தியில் ரீச் கிடைக்காததால் மீண்டும் சின்னத் திரை நோக்கிய பயணம் செய்ய தொடங்கினார். சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த போதே செந்தில் ஸ்ரீஜாவிற்கு காதல் மலர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

ஸ்ரீஜா வளைகாப்பு :

பின்னர் மீண்டும் இவர் தன் மனைவியுடன் இணைந்து ‘மாப்பிள்ளை’ என்ற தொடரில் நடித்தார். அதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகியும் செந்தில் – ஸ்ரீஜா தம்பதி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தார்கள். இது இவர்களின் ரசிகர்களுக்கு பெரும் குறையாக இருந்து வந்தது. இப்படி ஒரு நிலையில் ஸ்ரீஜா கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் ஸ்ரீஜாவின் வளைகாப்பு விழா நடைபெற்று இருக்கிறது. அதன் போட்டோக்களை செந்தில் இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியாக பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement