ஈழப் பெண் சர்ச்சையில் இருந்து வெளிவந்த தன் மருமகன் குறித்து மனம் திறந்த ஆர்யாவின் மாமியார்.

0
1608
arya
- Advertisement -

தனது மருமகன் நடிகர் ஆர்யா மீது ஈழப் பெண் பண மோசடி புகார் அளித்த விவகாரத்தில் இருந்து விடுபட்டதை குறித்து ஆர்யாவின் மாமியார் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வரும் ஆர்யா மீது கடந்த சில வாரங்களுக்கு முன் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி பல லட்சம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக இலங்கைப் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளதாக பரவி வரும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-200-1024x589.jpg

இப்படி இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிசிஐடி தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்டதையடுத்து விசாரணையை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது. இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதன் அடிப்படியில், ஆர்யா நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

இதையும் பாருங்க : ஒண்ணுமே தெரியாம ரஞ்சித் போட்ட shit டீவீட்டால் எனக்கு இவ்ளோ பிரச்சனை – ரோலிங் ஸ்டோன் சர்ச்சை குறித்து ஷான் வின்செண்ட்

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. போலீசார் நடத்தியுள்ள விசாரணையில் நடிகர் ஆர்யா போல் நடித்து இலங்கை பெண்ணிடம் பணம் பறித்த சென்னைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் உடந்தையாக இருந்த ஹூசைனி பையாக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த பிரச்சனையால் பல நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இந்த பிரச்சனையில் இருந்து தன்னை மீட்ட காவல்துறைக்கு நன்றி தெரிவித்து இருந்தார் ஆர்யா. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ஆர்யாவின் மாமியாரும், சயீஷாவின் அம்மாவுமான ஷாஹீன், உண்மையான குற்றவாளிகளை பிடிபட்டது நிம்மதி அளிக்கிறது. எப்போதும் போல ஆர்யாவின் அப்பழுக்கற்ற நேர்மையும் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று பதிவிட்டு காவல்துறைக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement