சீமான் சொத்துக்காக தன் மகன் என்கிறாரா? அவருடன் வரும் அந்த சிறுவன் யார்? விளக்கம் அளித்த சீமானின் மாமியார்

0
1518
- Advertisement -

சீமான் உடன் வரும் சிறுவன் குறித்து சீமானின் மனைவியின் அம்மா இது குறித்து கூறியுள்ளார். சில வருடங்களாக சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வரும் விஜயலக்ஷ்மி தற்போது சீமானால் அனைத்தையும் இழந்து நிற்பதாக கண்ணீர் மல்க பேசி இருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. இவர் 1997 ஆம் ஆண்டு நாகமண்டலம் என்ற கன்னடப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் இவர் தமிழில் பிரண்ட்ஸ் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின் சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதோடு இவர் சீமான் இயக்கிய வாழ்த்துக்கள் படத்திலும் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழில் கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் தான் நடித்திருந்தார்.

- Advertisement -

சீமான்-விஜயலக்ஷ்மி பிரச்சனை:

இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று விஜயலக்ஷ்மி புகார் செய்திருந்தார். இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஒரு கட்டத்தில் விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு கூட முயன்று இருந்தார்.

மீண்டும் சீமான் மீது புகார் :

ஆனால், சமீப காலமாக சீமானை பற்றி எந்த விஷயத்தையும் பேசாமல் இருந்து வந்த விஜயலக்ஷ்மி சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் சீமான் மீது மீண்டும் குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ‘2011ல் கொடுத்த வழக்கை மீண்டும் துவங்க சொல்லி இருக்கிறோம். ஹரி நாடார் கைதாகி இருக்கிறார். சீமான் இன்னும் கைதாகவில்லை. நான் என்னவோ காசுக்காக பண்றன்னுனாலாம் எழுதாதீங்க. இந்நிலையில் சீமான் எனக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். இனி அந்த கேவலத்தை பற்றி கேக்கதீர்கள் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

சீமான் தம்பதிக்கிக்கு 2019 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவருடன் இருக்கும் மற்றொரு குழந்தை கயல்விழியின் சகோதிரியின் மகன் என்பதும் கயல்விழியின் சகோதரிக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனைகள் வர அவரது கணவர் மனைவியை விட்டு அமெரிக்காவிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் கயல்விழியின் சகோதரி ஒரு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். அதன் பின் அவரது கணவர் தான் குழந்தையை அமெரிக்க அழைத்து செல்ல வந்த சீமான் குழந்தையை அனுப்ப மறுத்து விட்டார். அவரது கட்சிகாரர்களை பொறுத்தவரை அந்த பையன் சீமானின் வளர்ப்பு மகன். சீமான் இதனை அவர்களது சொத்து பங்கிற்காக தான் செய்து வருகிறார் என்றும் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சீமானின் மாமியார் கூறியது:

என்னுடைய மகள் இறந்த துக்கத்தில் இருந்து நாங்கள் மீண்டு வரவில்லை. என்னுடைய பெரிய பொன்னுக்கும் அவரது கணவருக்கும் பிரட்சனை இருந்தது உண்மைதான். எனது பேரன் அகில் அவனது அப்பா கூட செல்லமாட்டேன் என்று கூறிவிட்டான். எனது பேரன் என்னுடைய சின்ன பொன்னை கயல்ம்மா என்று தான் அழத்து வருகிறான். சீமானை ஆரம்பத்தில் சித்தப்பா என்று அழைத்து வந்த நிலையில் தற்போது தான் சீமானை அப்பா என்று அழைத்து வருகிறான். அதனால தான் சீமான் பேட்டிகளில் இரண்டு மகன் என்று கூறி வருகிறார்.

எனது பேரனுக்கு 18 வயது ஆனதும் அவன் அவனுடைய அப்பா கூட போக போறேன் என்று சொன்னால் யாரும் ஏதும் செய்யமுடியாது. எனக்கு சீமான் என் மகளை திருமணம் செய்து வைக்க வந்து கேட்டபோது எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் அவர் என்மகளை நன்றாக பார்த்து கொள்கிறார். நான் அவரது கடந்த காலங்கள் பற்றி ஏதும் கேட்க்கவில்லை அது பற்றி கேட்டு என்ன ஆகபோகிறது என்றும் விட்டுவிட்டேன். இதே போல புகார் சில ஆண்டுகளுக்கு முன் வைத்தார்கள் மீண்டும் தற்போது வந்து இருக்கிறார்கள் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று தெரியவில்லை என்றும் அவரது மாமியார் மனோகரி காளிமுத்து

Advertisement