மக்கள் செல்வன்னு பேர் வச்ச விஜய் சேதுபதி இப்படி தடம் மாறி போய்ட்டாரே – பத்திரிக்கையாளர் கேள்விக்கு சீனுராமசாமி சொன்ன பதில்.

0
365
seenu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர் விஜய்சேதுபதி. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் தயாராகி இருக்கிறது.

-விளம்பரம்-

ஒரு நடிகர் ஒரு திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் திரைக்கு வருவதே தமிழ் சினிமாவில் பெரும்பாடாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் அடுத்தடுத்த திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால, சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியில் தான் முடிவடைந்தது. ஆனால், இவர் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படங்கள் மட்டும் ஹிட் அடித்து விடுக்குறது.

- Advertisement -

சமீப காலமாக விஜய் சேதுபதி, தான் ஹீரோவாக நடிக்கும் படங்களின் கதைகளை கேட்பது இல்லை என்றும் படம் நடித்தால் போதும் என்பது போலவே இருக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் அவருக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை கொடுத்த சீனு ராம சாமி விஜய் சேதுபதியின் நிலை குறித்து பேசி இருக்கிறார். இயக்குனர் சீனு ராமசாமி விஜய் சேதுபதியை வைத்து பல படங்களை இயக்கி இருக்கிறார்.

மேலும், அவருக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை கொடுத்ததும் இவர் தான். 2014 ஆம் ஆண்டு சீன ராமசாமி இயக்கத்தில் தர்மதுரை படம் நடித்துக் கொண்டிருக்கும் போது தேனியில் ஆண்டிப்பட்டி என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது/ அப்போது அங்கே தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகளிடம் விஜய் சேதுபதி புளியோதரையும் துவையலையும் வாங்கி சாப்பிட்டு இருக்கிறார். அது மிகவும் ருசியாக இருக்கவே தன்னுடைய இயக்குனர் சீன ராமசாமிக்கும் ஊட்டி விட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் சேதுபதியின் இந்த எளிமையை பார்த்த சீன ராமசாமி அவருக்கு ‘மக்கள் செல்வ’ன் என்ற பட்டத்தை வைத்து ஐநூறு ரூபாய் காசையும் கையில் கொடுத்திருக்கிறார். விஜய் சேதுபதியும் இந்த பட்டம் தனக்கு வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். ஆனால் அதற்கு ராமசாமி ” இந்த பெயர் உன்னைக் காப்பாற்றும் என்று கூறி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி தடம் மாறி சொல்கிறாரா என்று சீனு ராமசாமியிடம் கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு பதில் அளித்த சீனு ராமசாமி ‘ஒரு திறமையான கலைஞருக்கு பின்னடைவுகள் இருக்கும் என்று பெரிய நடிகர்களாக இருக்கும் சில நடிகர்களுக்கு கூட அப்படி ஒரு காலம் இருந்திருக்கிறது. அதில் அவர்கள் பாடம் கற்றுக்கொண்டு அதிலிருந்து மீண்டு வருவார்கள். அதே போலத்தான் விஜய் சேதுபதியும் மீண்டு வருவார். விஜய் சேதுபதிக்கு நடிப்பின் மீது இருக்கும் உண்மையான அன்பு, அக்கறை, பிரியம், அர்ப்பணிப்பு எல்லாம் இருக்கிறது. அவர் ஒரு பீனிக்ஸ் பறவை போல மீண்டும் வருவார்’ என்று கூறியுள்ளார்

Advertisement